பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி ஆ 263 என்பதை உணராதே களம் புகுந்து விட்டான். ஆனால், ஆங்குச் சென்ற பின்னர்த், தன் வேந்தனையும் அவ்வேந்த னுக்குத் துணை நின்ற பெரும் படையையும் பாழ்செய்த அப்பகை வேந்தன், பெரும் படை கொண்டு போரிட்டா னல்லன்; அதை அவன் ஒருவனாகவே நின்று முடித்து விட்டான் என்பதை அறிந்தான். அஃதறிந்த அவனுக்குத் தன் வேந்தன் பெரும்படை ஒருவனால் அழிவுற்றுப் போவதா என ஒரு பால் ஆறாச்சினமும், தன் வேந்தன் பெரும் படையைப் பகை வேந்தன் ஒருவனால் அழிக்க முடிந்தது என்றால், அப்பகைவனின் இப்படையை நான் ஒருவனாகவே நின்று வெற்றி கோடல் இயலாதோ என ஒரு பால் அளக்கலாகாத் துணிவும் ஒரு சேரக் கொண்டான். அவ்விரு உணர்வும் அவன் உள்ளத்தேயிருந்து ஊக்கியதன் பயனாய், வாள் துணையல்லது வேறு துணையில்லா அவன், பகைப் படை அனைத்தையும் கொன்று குவித்து விட்டான். அதைக் கூறுவதே நூழில் என்னும் இத்துறை. தலையாலங் கானப் போரில், தான் ஒருவனாகவே இருந்து ஏழு அரசர்கள் கூடி வந்தெதிர்ந்த கூட்டணியை முறியடித்து வெற்றி கொண்ட நெடுஞ்செழியன் செயல் இத்துறைப் பாற்பட்டதாம் எனக் கொள்க. - "ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும் புதுவதன்று; இவ்வுலகத்து இயற்கை; இன்றின் ஊங்கோ கேளலம்,... பொருதும் என்று தன்தலைவந்த புனைகழல் எழுவர் நல்வலம் அடங்க, ஒருதான் ஆகிப் பொருது களத்து அடலே." -புறம்: 76. தும்பைத் திணையைச் சார்ந்தனவாகத் தொல் காப்பியனார் கொண்ட இத்துறைகளோடு ஒட்டிய துறை