பண்டைத் தமிழர் போர் நெறி இ. 71
- ... .
கைப்பற்றிச் செல்கின்றனர் என்ற செய்தி கேட்டுச் சினந்தவர் மேற்கொள்ளும் போர் அது. தம் பொருள் கொள்ளை போகிறது என அறிந்து மேற்கொண்ட போர். ஆகவே, அப்போர் மேற்கொள்வார், அப்போர் தொடங்கற் காம் காலத்தின் நன்மையினையோ, ஏற்புடைய இடவாய்ப் பினையோ பகைவர்க்கும் தமக்கும் உளவாம் படை வலியினையோ எண்ணிப்பாரார். செய்தி கேட்டவுடனே செய்யும் தொழிலையும் மறந்து அந்நிலையிலேயே விரைந்து ஒடுவர். "நிரைகோள்கேட்டுச் செய்தொழில் ஒழிய விரைவினர் குழு உம் வகையுரைத்தன்று” என்ற வெண்பாமாலை விளக்கத்தினையும் காண்க. ஆகவேதான், கரந்தைத் திணைக்கு நற்சொல் கேட்கும் விரிச்சி, பகைவர் படைவலியறியும் "வேய்” முதலாம் துறைகள் இல்லாயின. பாலை நிலத்து மறவர் களவாடிச் சென்ற ஆனிரையை மீட்டுக் கொணர்ந்து ஒம்பும் ஆயர்களின் புகழ் பாடுவதே வெட்சித் திணையாம் என்ற கருத்துடையராகிக் குறிஞ்சிப் புறனாகிய வெட்சியாவது, களவாடிச் செல்லப்பட்ட ஆனிரையை வேற்றுப் பலத்திலிருந்து மீட்டுக் கொணர்ந்து ஒம்பல் ஆகும்-"வெட்சிதானே குறிஞ்சியது புறனே", "வேந்து விடுமுனைஞர் வேற்றுப் புலக் களவின் ஆதந்து ஓம்பல் மேவற்று ஆகும்” என வெட்சியின் பொது இலக்கணம் கூறி, அதன் பின்வரும் படைஇயங்கு அரவம் "மறங்கடை கூட்டிய” என்ற சூத்திரங்களில் களவாடும் பாலை நிலத்து மறவர் செயல்களையும் அதன் பின் வரும் “வெறியறி சிறப்பின்” என்ற சூத்திரத்தில் நிரை மீட்கும் ஆயர் தொழிலையும் முறையே விளக்கிச் சென்றுள்ளார் ஆசிரியர் தொல்காப்பியனார். வெட்சித் திணைப் பொருள் பற்றிய தம் கருத்தினை ஆசிரியர்