பரம்பொருள் ஏற்றம் 8 171
வெற்றரசு எய்தி எம்பி
வீட்டரசு எனக்கு விட்டான் (126).
என்று கூறியவற்றால் இராமனது பரத்துவம் அறுதியிடப் பெறுகின்றது.
மரணப் படுக்கையிலிருந்து கொண்டு வாலி சுக்கிரீவனுக்கு உறுதிப்பொருள் உரைக்கும் போக்கில் இராமன்தான் பரம்பொருள் என்று கூறுகின்றான்;
மறைகளும் முனிவர் யாரும்
மலர்மிசை அயனும் மற்றைத் துறைகளின் முடிவும் சொல்லும்
துணிபொருள் துணிவால் தூக்கி அறைகழல் இராமன் ஆகி
அறநெறி நிறுத்த வந்தது இறையொரு சங்ஆ இன்றி
எண்ணுதி. (மறைகள் - வேதங்கள்; துறைகள் - சாத்திரங்கள்; முடிவு - சித்தாந்தம்; துணிபொருள் - தேர்ந்த
பொருளாகிய பரப்பிரம்மம்) என்று இராமனது பரத்துவத்தைப்பற்றி உணர்த்துகின்றான். தொடர்ந்து, "அழியாமல் எந்நாளும் நிலை நிற்கின்ற முக்திச் செல்வதை அமைய விரும்பி அதற்குரிய நெறி நிந்கின்ற முமுட்சுகளான ஆன்மாக்கள் யாவும் இவன் திருநாமத்தை செபிக்கின்றன; இவனைத் தியானிக்கின்றன. இதனை நீ உணர்வாய். சாமானியமாக இவனிடத்திலுள்ள சிறப்பை நோக்கினாலும், அதற்கு என்னைக் கொன்றிட்ட இந்த வலிமையே சான்றாகும். இதனைக் காட்டிலும் மேலான சான்று ஒன்றும் வேண்டா' ' என்றும்,
23. கிட்கிந்தை - வாலி வதை - 132 24. மேற்படி - 133