சகோதர வாஞ்சை 41
துயிலெனும் அணங்கு வந்து
தோன்றலும் அவளை நாமே எயிலுடை அயோத்தி மூதூர்
எய்துநாள் எய்தும் என்றான்" இலக்குவனனின் இச்செயலை நோக்கும்போது பாரதியின் "கண்ணன்-என் சேவகன்” நினைவிற்கு வருகின்றான்.
பரதனின் சகோதர வாஞ்சை கேகய நாட்டினின்றும் திரும்பிய பரதனிடம் கைகேயி இராமன் தம்பியுடனும் மனைவியுடனும் கானகம் சென்றதைத் தெரிவிக்கின்றாள், பரதனும் இராமனைத் தந்தையாகவும், தாயாகவும் இறைவனுமாகவும் கொண்டவன்
வாக்கினால் வரந்தரக்
கொண்டு மைந்தனைப்
போக்கினேன் வனத்திடைப்;
போக்கிப் பார்உனக்கு
ஆக்கினேன்; அவன் அது
- பொறுக்க லாமையால்
நீக்கினான் தன்.உயிர் நேமிவேந்து"
என்று கூறவும் பரதனுக்கு வெகுளி பொங்கி எழுகின்றது-சகோதர வாஞ்சையின் காரணமாக நான்கு பாடல்களில் பரதனது இவகுளியின் மெய்ப்பாடுகள் சித்திரிக்கப் பெறுகின்றன’ பரதன் கைகேயியைத் தாய் என்று உயிரோடு விட்டான். இவளைக் கொன்றால் இராமன் சினங்கொள்வானே என்று கொல்லாது
17. அயோத்தி - கங்கை 51 18. அயோத்தி - பள்ளிபடை - 58 19. மேற்படி - 65 20. மேற்படி - 66-69