பக்கம்:பண்பு தரும் அன்புக் கதைகள்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

---* 38 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா வீட்டைப் பிரித்தார்கள். பணத்தைப் பிரித்தார்கள். ஆனால் அந்த இரண்டு வீட்டுக்கும் மத்தியில் இருந்த மாமரத்தை என்ன செய்வது? நிலமும் சொத்தும் தன் கைக்கு வந்த மகிழ்ச்சியில் அந்த மரம் தனக்கு வேண்டாமென்று சிவசாமியே கூறி விட்டான். எங்கே அந்த மரத்தை வெட்டிவிட வேண்டும் என்று கேட்கப் போகிறானோ என்று பயந்து கொண்டு, எல்லாத் தெய்வங்களையும் வேண்டிக் கொண்டிருந்த முத்துலட்சுமி, இதைக் கேடடதும் நிம்மதியாக ஆனந்தப் பெருமூச்சு விட்டாள். - தனித்தனியாக சகோதரர்கள் வாழத் தொடங்கினார்கள். நாட்கள் போய்க் கொண்டேயிருந்தன! தம்புசாமியும் முத்துலட்சுமியும் மனதுக்குள் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தாலும், வழக்கம் போல, வயலில் கடும் உன்ழைப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். சிவசாமியும் வழக்கம் போல, தன் சில்லறைத் தனமான செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான். 庾莲 *...) is نتوانستانتینثاني*** o வசாமியின் கையிலிருந்த பணமும்