பக்கம்:பண்பு தரும் அன்புக் கதைகள்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா என்ற மகிழ்ச்சியுடன் தன் வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தார். - "இனிமேல் நான் எதையும் மறக்கமாட்டேன். நன்றாக நினைவில் வைத்துக் கொள்வேன் சார்' என்று கூறியபடியே, சுந்தரம் தலைமை ஆசிரியர் அறையை விட்டு வெளியே வந்தான். - அவன் முத்துவிடம் மன்னிப்புக் கேட்பதற்காக போய்க் கொண்டிருந்தான். முத்துவோ இனிமேல் கதைப் புத்தகத்தை பள்ளிக் கூடத்திற்குக் கொண்டு வருவதில்லை என்ற உறுதியுடன் வகுப்பில் உட்கார்ந்திருந்தான், - 'ஒரு புத்தகம் எத்தனை எத்தனை நிகழ்ச்சியை உண்டு பண்ணிவிட்டது. பார்த் தீர்களா! என்று ஆங்கில ஆசிரியர் வகுப்பில் அருமையாகப் பேசிக் கொண்டிருந்தார். - -