பக்கம்:பண்பு தரும் அன்புக் கதைகள்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7Ο டாக்டர் எஸ். தவராஜ் செல்லையா தோற்கடிக்க முயல்கிறார் ஆசிரியர். அதனால் நாம் இனிமேல் ஆடவேண்டாம். ஆடுகளத்தை (மைதானத்தை) விட்டு வெளியே போய்விடலாம் என்று யோசனை கூறினான். எல்லோரும் ੀ என்றார்கள். மூர்த்தியிடமும் கூறினார்கள். ஆசிரியர் செய்வது அநியாயம் என்று சத்தம் போட்டனர். நாங்கள் விளையாட மாட்டோம் என்று ஆட மறுத்தனர். மூர்த்தியை அழைத்துக் கொண்டு வெளியே வந்துவிட்டனர். மூர்த்தியால் பேச முடியவில்லை. அவன் விருப்பம் இல்லாமலேயே வெளியே எல்லோரும் வந்துவிட்டனர், அவனும் வெளியே வந்து விட்டான். ஆசிரியர் வந்து அழைத்தும், யாரும் போகவில்லை. மூர்த்திக்குப் பேச சந்தர்ப்பமே இல்லை. do ஆட்டம் முடிந்துவிட்டது என்று ஆசிரியர் அறிவித்து விட்டார். எதிர்க் குழு வெற்றி பெற்றது என்றும் கூறினார். அதைப் பற்றி தலைமை ஆசிரியரிடம் புகார் செய்வதாகவும் கூறி விட்டார். மறுநாள் காலை, பத்தாம் வகுப்பு 'அ' பிரிவு விளையாட்டு வீரர்கள் அனைவரையும் கலை ைஆசிரியர் அமைப்பதாக , பியூன் வந்து