பக்கம்:பதினாறும் பெறுக.pdf/24

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

21

21

பாட்டு-வேறு தாளம்-அடை

தலைவி : கணவனின் சொற்படி பெற்றேனம்மா

காத்திட வகையேதும் கற்றேனில்லை

பெரும: அடிமையோ, பெண்ணினம் அநியாயமோ !

ஆணுலகுக்கிது சுகபோகமோ ?

தலைவி: யாரை நோவதிலும் பயனில்லையே

சாவதை விட வேறு வழியில்லையே

பெரும : குழந்தைகள் வாழ்வுக்கு யார் துணையோ? குடும்பத்தைப் பேணுதல் யார் கடனோ?

தலைவி : ஐயோ! அம்மா!

(சுருண்டு விழுகிறாள்)

பெரும : அடியே! மகளே!

(மூக்கில் விரல் வைத்து இறந்துவிட்டதறிகிறாள் பெருமகள் பிரமித்து நிற்கிறாள்)

வருத்தம்-வருத்தம் மலர்சூடி மஞ்சமதில் விளையாடிக் களித்தவளே ! மக்கள்தமை மிதமிஞ்சிப் பெற்றதனால் நசிந்தவளே! நலமேதும் கிடைக்காது பசியாலும் பிணியாலும் நலிந்து மனம் சிதைந்து நடுத்தெருவில் மடிந்தாயே!

(பதறி ஓடி வருகிறான் தலைவன்)

தலைவன்: எங்கே? எங்கே? எங்கே? என் மனைவி?

பெரும : இங்கே, இங்கே கிடக்கிறாள் பிணமாக

பாட்டு-தாளம்-அடை

தலைவன்: ஐயயோ என் தாரம் என்னவானாள்?

பெரும: ஆவி பிரிந்தின் பலோகம் போனாள் தலைவன் வறுமைப் பிணியுடன் போரிட்டவள் பெரும் வயிற்றுப் பிள்ளையுடன் போய்விட்டனள் தலைவன் ஆ! ஐயா என் மனைவி இறந்தாளா? ஐயோ!

(மேல் விழுந்தழுகிறான்)

பாட்டு-முகாரி-தாளம்-சாபு

எடுப்பு

தலைவன்: ஆருயிர் மனைவியே மடிந்தனையோ?

அடியேனை வெறுத்துயிர் பிரிந்தனையோ-ஐயோ

(ஆரு)

தொடுப்பு

பேருலக வாழ்வினில் பெருமை வருகுமென்று பெற்றோமே பிள்ளைகளை உற்றோமே துன்பநிலை (ஆரு)

தேம்பி அழுகிறான்,