21
21
பாட்டு-வேறு தாளம்-அடை
தலைவி : கணவனின் சொற்படி பெற்றேனம்மா
காத்திட வகையேதும் கற்றேனில்லை
பெரும: அடிமையோ, பெண்ணினம் அநியாயமோ !
ஆணுலகுக்கிது சுகபோகமோ ?
தலைவி: யாரை நோவதிலும் பயனில்லையே
சாவதை விட வேறு வழியில்லையே
பெரும : குழந்தைகள் வாழ்வுக்கு யார் துணையோ? குடும்பத்தைப் பேணுதல் யார் கடனோ?
தலைவி : ஐயோ! அம்மா!
(சுருண்டு விழுகிறாள்)
பெரும : அடியே! மகளே!
(மூக்கில் விரல் வைத்து இறந்துவிட்டதறிகிறாள் பெருமகள் பிரமித்து நிற்கிறாள்)
வருத்தம்-வருத்தம் மலர்சூடி மஞ்சமதில் விளையாடிக் களித்தவளே ! மக்கள்தமை மிதமிஞ்சிப் பெற்றதனால் நசிந்தவளே! நலமேதும் கிடைக்காது பசியாலும் பிணியாலும் நலிந்து மனம் சிதைந்து நடுத்தெருவில் மடிந்தாயே!
(பதறி ஓடி வருகிறான் தலைவன்)
தலைவன்: எங்கே? எங்கே? எங்கே? என் மனைவி?
பெரும : இங்கே, இங்கே கிடக்கிறாள் பிணமாக
பாட்டு-தாளம்-அடை
தலைவன்: ஐயயோ என் தாரம் என்னவானாள்?
பெரும: ஆவி பிரிந்தின் பலோகம் போனாள் தலைவன் வறுமைப் பிணியுடன் போரிட்டவள் பெரும் வயிற்றுப் பிள்ளையுடன் போய்விட்டனள் தலைவன் ஆ! ஐயா என் மனைவி இறந்தாளா? ஐயோ!
(மேல் விழுந்தழுகிறான்)
பாட்டு-முகாரி-தாளம்-சாபு
எடுப்பு
தலைவன்: ஆருயிர் மனைவியே மடிந்தனையோ?
அடியேனை வெறுத்துயிர் பிரிந்தனையோ-ஐயோ
(ஆரு)
தொடுப்பு
பேருலக வாழ்வினில் பெருமை வருகுமென்று பெற்றோமே பிள்ளைகளை உற்றோமே துன்பநிலை (ஆரு)
தேம்பி அழுகிறான்,