பக்கம்:பதினாறும் பெறுக.pdf/25

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

22

22

பாட்டு-தாளம்-ஏகம்

பெரும: அதிகம் பெற்றால் பெருமையென்று கருதிக்கெட்டவனே! அறிவிழந்து மணந்தவளே அழித்து விட்டவனே! எதிலுமொரு அளவில்லையோ? முறையும் இல்லையோ? - இதை மறந்தால் குடும்ப நலம் விளங்குவதுண்டோ? (அதி)

(சினந்து எழுகிறான்)

தலைவன்: அடிப்பாவி! இப்போது என்ன சொன்னாய்? பெரும எப்போதும் அழியாத நீதி சொன்னேன்!

பாட்டு-அடாணா- ரூபகம்

தலைவன்: பதினாறுமே பெற்றுப் பெருவாழ்வு வாழ்ந்திட

வாழ்த்தினவள் நீதானல்லவோ?-இன்று சதிகாரன் நானென்று பழிபோட்டுத் தூற்றுறாய் இருநாக்குடன் விளையாடுகிறாய்!

பெரும:பதினாறு பெருமைக்கும் தவறாகப் பொருள் செய்து பாழாக்கினாயுன்றன் குடியை-இந்த மதிபோன் செயலுக்கும் கதிபோன நிலைமைக்கும் மடமையே காரணமாகுமே!

பாட்டு-தாளம்-ஆதி

தலைவன் எங்களை நீ வாழ்த்தியதின் பொருளென்னவோ?

இந்த நிலை தன்னிலேனும் விளக்குக தாயே.

பெரும: பெறுக பதினாறென்று நான் வாழ்த்தினேனடா

தேறடா உண்மை இதைக்கேளடா தம்பி.

மெட்டுவேறு-தாளம்-ஆதி

பெரும : கல்வியோடு கேள்வியும் கட்டழகும் ஊர்த்தியும்

கற்புடைய மனைவியும் பொற்புடைய மக்களும் அறிவோடு ஒழுக்கமும் அன்னமும் நல் இல்லமும் ஆனந்த போகமும் அந் நிலத்தோடு நீர்வளம் நிறைவுடைய புகழுமே நீங்காத பொன்கலன் ஆகப்பேறு பதினாறு இத்தனையும் பிள்ளைகளாய் பெற்றுவிட முனைந்தாயே சித்தமதில் சென்றதினால் சீரழிவு வந்ததுவே

(தலைவன் பதறுகிறான் )

தலைவன்: ஆ! ஐயோ! மெய்யா? ஐயோ! கதறுகிறான்)

பெரும: ஆமாம், மகனே! இதுவே நீதி.

பாட்டு

தாளம்-அடை

தலைவன்: ! ஐயயோ மதி மோசம் போனேனே-சொல்லை

ஆராய்ந்து பாராமல் வீணானேன் வையகம் தூற்றுமே என்னறிவை-நல்ல வாழ்வினை துய்க்காத சின்னவனை

(மனைவியின் பிணத்தின் முன்பு மண்டியிடுகிறான்)