27
கமல : அப்படியானால், காபியைக் கொடு தாழம்பூ !
தாழம்பூ : அம்மா! வாக்குறுதி கொடுத்தவருக்கு நான் காபிதானா கொடுக்கவேண்டும்?
கமல் : இப்பொழுது கொடுக்க காபிதானே தயாராக இருக்கிறது ? மற்றதை பிறகு பார்த்துக்கொள்வோம். கொடு. (கொடுக்கிறாள்.) (பெற்றுக்கொள்கிறான் இளங்கோ)
இளங் : காபியும் இன்றைக்குத்தான் எனக்குச் சுவை கொடுக்கும் !
கமல : இல்லை இளங்கோ! உன் அப்பாவின் அனுமதி பெற்ற பிறகுதான் அந்தச் சுவை முழுமையாகும் !
இளங் : திருமணத்திற்கான அனுமதி தானே ? நாளையே பெற்று வருவேனம்மா.
கமல: அது மிக முக்கியம், மறவாதே !
(உள்ளே செல்லுகிறாள். குடிப்பதை நிறுத்தி, தாழம்பூவை உற்றுப் பார்க்கிறான் இளங்கோ. புன்னகை புரிகிறான்)
தாழம்பூ : நீங்கள் இப்போது சுவைக்கவேண்டியது காபியை.
இளங் : காதலைச் சுவைக்கவும் உரிமை பெற்றுவிட்டேன். தாழம்பூ இனிமேல் நான் தலைவன். நீ தலைவி.
தாழம்பூ : ஆனால், நீங்கள் தலைகீழாக நின்றாலும் நாடகத்தலைவி
போல் நான் நடக்கவே மாட்டேன்.
இளங் : நான் மட்டும் என்னவாம்? பெறவேண்டியது பதினாறல்ல மூன்றுதான் என்பது முடிவாகிவிட்டதே தாழம்பூ !
(கையைப் பற்றுகிறான்)
தாழம்பூ: எந்த முடிவு எப்படியானலும் இந்தத் தாழம்பூ என்னமோ மணந்த பிறகுதான் மணம் வீசும். விடுங்கள் கையை.
(விடுவித்துக்கொண்டு உள்ளே ஓடுகி றாள் திரும்பித் திரும்பி குறும்பாகப் பார்த்த வண்ணம்)
காட்சி 11
இடம் : பரமசிவம் வீடு
காலம்: மாலை,
(பரமசிவம் நாற்காலியிலமர்ந்து, பத்திரிகை படித்துக்கொண்டிருகிறார், மகன் இளங்கோ மெதுவாக வருகிறான். நின்று கவனிக்கிறான்)
இளங் : (குழைவோடு) அப்பா !
இளங் : அப்பா......அப்பா......
பரம : (திடுக்கிட்டுப் பார்த்து) ஓ! இளங்கோவா? வாடா தம்பி, உட்காரு.
(பக்கத்திலிருந்த நாற்காலியில் அடக்கமாக அமருகிறான்)
இளங்: அப்பா நீங்கள் எனக்குத் தந்தை மட்டுமல்ல. தாயுமானவர்.இல்லையா?
பரம: ஆமாம். எதுக்கடா இந்தப் பீடிகை?