பக்கம்:பதினாறும் பெறுக.pdf/34

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

31

31

தாழம் : என் தோழி பரிமளத்திற்குத் திருமணம் நடக்கப் போகிறதாம். மணவிழாவில் நமது 'பதினாறும் பெறுக’ நாடகத்தை நடத்த வேண்டுமென்று விரும்புகிறாளம்மா !

கமல : நீ என்னம்மா சொன்னாய் ?

தாழம் : அம்மாவைக் கேட்கவேண்டும் என்று சொல்லிவிட்டேன்.

கமல : அதுதான் சரி. இந்தச் சமயத்தில் நாடகம் வேண்டாம்

தாமும்பூ:காரணம் என்னம்மா ?

கமல : நான் எதிர்பார்த்தபடி உனது திருமண ஏற்பாடுகள் அமைய வில்லை. மூன்றும் பதினாறும் முட்டி மோதிக்கொண்டு குறுக்கே நிற்கின்றன !

தாழம் : விளங்கவில்லையே ?

கமல : உனக்கும் இளங்கோவுக்கும் பரமசிவனார் மணம் முடிக்கிறாராம். ஆனால் மூன்றல்ல, பதினாறு பிள்ளைகள் பெறவேண்டு மென்பது நிபந்தனையாம்.

தாழம் : பலே அந்தப் பெரிய மனிதர்கள் நமது நாடகத்தைப் பார்த்த தன் விளைவா இது ? நிபந்தனை நம்மைப் பழி வாங்குவ தாகவல்லவா இருக்கிறது ?

கமல: இதை எப்படி நம்மால் ஒப்புக்கொள்ள முடியும் தாழம்பூ ?

தாழம் : அம்மா ! இப்பொழுதென்ன அவசரம் ? எனக்குத் திருமணமே வேண்டாம்.

இளங் : அப்படியானால் எனக்கும் திருமணம் வேண்டாம்.

கமல : (சிரித்து) முதலில் நமது இலட்சியம் மணக்கட்டும். பிறகு வேண்டாம் வேண்டாம் என்றாலும் திருமணம் தானாக நடக்கும்.

இளங்: நல்லது நான் வருகிறேனம்மா.

கமல: போய்வா. இளங்கோ, கலங்க வேண்டாம்,காலம் வரும்,காத்திருப்போம்.

(போகிறான் இளங்கோ)

காட்சி 13

இடம் : பரமசிவம் வீடு.

காலம் : முற்பகல்.

(பரமசிவமும், செல்வரங்கமும் வீற்றிருக்கின்றனர்)

செல்வ : பரமசிவம் ! தன்னோட மகள் பதினாறும் பெக்கறதுக்கு ஒப்பு குட்டாளா கமலவேணி ?

பரம : ஐயா அவ லட்சியவாதியாச்சே, எப்படிங்க ஒத்துக்குவா ?

செல்வ: அது தானே கேட்டேன். அந்த ராங்கிக்காரி ஒப்புக்கமாட்டான்னு எனக்குத் தெரியும். பிறகு, நம்ப சண்பகம்-இளங்கோ கல்யாணத்தை எப்ப வச்சிக்கலாம் ?

பரம : கொஞ்சநாள் போகட்டுமே!

387/5–3