31
31
தாழம் : என் தோழி பரிமளத்திற்குத் திருமணம் நடக்கப் போகிறதாம். மணவிழாவில் நமது 'பதினாறும் பெறுக’ நாடகத்தை நடத்த வேண்டுமென்று விரும்புகிறாளம்மா !
கமல : நீ என்னம்மா சொன்னாய் ?
தாழம் : அம்மாவைக் கேட்கவேண்டும் என்று சொல்லிவிட்டேன்.
கமல : அதுதான் சரி. இந்தச் சமயத்தில் நாடகம் வேண்டாம்
தாமும்பூ:காரணம் என்னம்மா ?
கமல : நான் எதிர்பார்த்தபடி உனது திருமண ஏற்பாடுகள் அமைய வில்லை. மூன்றும் பதினாறும் முட்டி மோதிக்கொண்டு குறுக்கே நிற்கின்றன !
தாழம் : விளங்கவில்லையே ?
கமல : உனக்கும் இளங்கோவுக்கும் பரமசிவனார் மணம் முடிக்கிறாராம். ஆனால் மூன்றல்ல, பதினாறு பிள்ளைகள் பெறவேண்டு மென்பது நிபந்தனையாம்.
தாழம் : பலே அந்தப் பெரிய மனிதர்கள் நமது நாடகத்தைப் பார்த்த தன் விளைவா இது ? நிபந்தனை நம்மைப் பழி வாங்குவ தாகவல்லவா இருக்கிறது ?
கமல: இதை எப்படி நம்மால் ஒப்புக்கொள்ள முடியும் தாழம்பூ ?
தாழம் : அம்மா ! இப்பொழுதென்ன அவசரம் ? எனக்குத் திருமணமே வேண்டாம்.
இளங் : அப்படியானால் எனக்கும் திருமணம் வேண்டாம்.
கமல : (சிரித்து) முதலில் நமது இலட்சியம் மணக்கட்டும். பிறகு வேண்டாம் வேண்டாம் என்றாலும் திருமணம் தானாக நடக்கும்.
இளங்: நல்லது நான் வருகிறேனம்மா.
கமல: போய்வா. இளங்கோ, கலங்க வேண்டாம்,காலம் வரும்,காத்திருப்போம்.
(போகிறான் இளங்கோ)
காட்சி 13
இடம் : பரமசிவம் வீடு.
காலம் : முற்பகல்.
(பரமசிவமும், செல்வரங்கமும் வீற்றிருக்கின்றனர்)
செல்வ : பரமசிவம் ! தன்னோட மகள் பதினாறும் பெக்கறதுக்கு ஒப்பு குட்டாளா கமலவேணி ?
பரம : ஐயா அவ லட்சியவாதியாச்சே, எப்படிங்க ஒத்துக்குவா ?
செல்வ: அது தானே கேட்டேன். அந்த ராங்கிக்காரி ஒப்புக்கமாட்டான்னு எனக்குத் தெரியும். பிறகு, நம்ப சண்பகம்-இளங்கோ கல்யாணத்தை எப்ப வச்சிக்கலாம் ?
பரம : கொஞ்சநாள் போகட்டுமே!
387/5–3