பக்கம்:பதினாறும் பெறுக.pdf/46

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

43

43

சுந்தர : அப்பா ! இனிமே நீங்க எங்கப்பா தானே? இனிமே என்னை அனாதைன்னு சொல்லி வெரட்டமாட்டீங்களே ?

பரம: (வருந்தி) வாடா மகனே சுந்தரம் (கட்டியணைத்து) உன்னைப் பெத்து வளர்க்கும் அப்பாதாண்டா நான். என் அச்சமும் அறியாமையும் உன்னை அனாதைன்னு சொல்லவச்சுட்டதடா ! இளங்கோ நம்மை ஒரு இலட்சியக் குடும்பமா சேத்து வச் சுட்டாண்டா மகனே ! (அணைத்துக்கொள்ள கையில் மாலைகளோடு, முத்தன் ஓடி வருகிறான்.)

முத்தன்: போச்சு போச்சு எல்லாம் போச்சு அநியாயமா போச்சு !

இளங்: என்னப்பா போச்சு? எங்கே போச்சு?

முத்தன்: சேலம் பிரபு செல்வரங்கத்தோட குடும்பப் பெருமை ஆடிக்காத்து எச்சிலையாய் பறந்து போச்சு !

செல்வ: டாய் ! அயோக்கியப் பயலே என்னடா ஒளர்றே? என்னுடைய குடும்பப் பெருமை எப்பவும் கொடிகட்டிப் பறக்குமடா !

முத்தன் : பறக்குதுங்க கட்டுப்பாடில்லாத, குடும்பத்துக்குக் கெடைக்க வேண்டியது உங்களோட குடும்பத்துக்கும் கெடச்சிட்டுதுங்க.

செல்வ: கபோதிப்பயலே! என்னடா கதையளக்கிறே ?

முத்தன்: இது நடந்த கதைங்க. எதுத்த வீட்டுக் குப்புசாமியைக் காதலித்த ஒங்களோட ஏழாவது மகள் சண்பகம் இந்தக் கல்யாண நிர்ப்பந்தம் பிடிக்காமெ கண்ணியமா காதலனோட வீட்டை விட்டு வெளியேறிட்டாங்க. தந்தைக்கு மகள் எழுதி வச்ச கடுதாசியோட தோ ! வெளியே வந்து காத்திருக் கிறான் ஒங்க வீட்டு சமையல்காரன் ! போங்க போய்ப் பாருங்க !

செல்வ : ஆங்! ஐயோ ஐயோ !

(வயிற்றில் அடித்துக் கொண்டு ஓடுகிறார் செல்வரங்கம்)

கமல: குடும்பப் பெருமை வீட்டோடு கொடிகட்டிப் பறக்கவில்லை. வெளியே கொடியைத் தூக்கிக்கொண்டும் பறக்கிறது போலும்.

முத்தன்: குட்டுப்பட்டாலும் செல்வரங்கம் மோதிரக் கையாலேதான் குட்டுப் . பட்டிருக்காருங்க. குப்புசாமி படிச்ச பையனுங்க, நல்ல பையன் ஒழுக்கமுள்ளவன். அந்தக் காதல் கலப்பு மணத் தம்பதிகளுக்கு நம்ப வாழ்த்துச் சொல்லணுமுங்க.

தாழம்: ஆனால், பதினாறும் பெறச் சொல்லி மட்டும் யாரும் வாழ்த்த வேண்டாம்.

கமல : கட்டுப்பாடாக மூன்று பெற்று கண்ணியமாக வாழட்டும். அதுதான் சிவப்பு முக்கோணச் சிறப்பு.

பரம : கமலவேணியம்மாள் என்னை மன்னிக்கணும். போலி கவுரவத்திற் கும், வறட்டு ஜம்பத்திற்கும் அடிமையாய்க் கிடந்த எனக்கு நல்ல பாடம் கெடைச்சிட்டுது. சின்ன குடும்பத்திலேதான் ஒழுக்கமும் கட்டுப்பாடும் உயர்வான நடத்தையும் இருக்க முடியும்கிறதை நல்லாத் தெரிஞ்சுக்கிட்டேன்.

கமல: மிக்க மகிழ்ச்சி. "பெருமைக்கும் ஏனைச்சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக்கல்” என்றார் வள்ளுவர். அந்த கல் நீங்கள் பத்தரை மாற்றுத்தங்கம் என்பதைத் தெளிவாகக் காட்டிவிட்டது.