பக்கம்:பதிற்றுப்பத்து-புலா அம்பாசறை.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிகம்

மடியா வுள்ளமொடு மாற்றோர்ப் பிணித்த

நெடு நுண் கேள்வி யந்துவற் கொருதந்தை ஈன்றமகள் பொறையன் பெருந்தேவி யின்ற மகன்

நாடு பதிபடுத்து கண்ணா ரோட்டி

5 வெருவரு தானை கொடுசெருப்பல கடந்து - ஏத்தல் சான்ற விடனுடை வேள்வி

ஆக்கிய பொழுதி னறத்துறை போகி. மாய வண்ணனை மன னுறப் பெற்றவற்

கோத்திர நெல்லி னொகந்து ரீத்துப்

10 புரோசு மயக்கி • -

மல்ல லுள்ளமொடு மாசற விளங்கிய செல்வக் கடுங்கோ வாழி யாதனைக் கபிலர் பாடினார் பத்துப் பாட்டு. அவைதாம், புலா அம் பாசறை, வரை போலிஞ்சி, அருவியாம்பல், உரைசால் வேள்வி, நாண் மகிழிருக்கை, புதல் சூழ் பறவை, வெண் போழ்க்கண்ணி, ஏம வாழ்க்கை, மண்கெழு ஞாலம், பறைக் குரலருவி, இவை பாட்டின் பதிகம். -

பாடிப் பெற்ற பரிசில்: சிறு புறமென நூறாயிரங் காணங்கொடுத்து, நன்றாவென்னும் குன்றேறி நின்று தன் கண்ணிற்கண்ட நாடெல்லாம் காட்டிக் கொடுத்தான். அக்கோ, செல்வக் கடுங்கோ வாழியாதன் இருபத்தை யாண்டு வீற்றிருந்தான். -