பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நான்காம் பத்து

139

சொற்பொருளும் விளக்கமும்:'போர் முரசம் இன்னிசை இமிழ்தல் ஆவது, போர் விருப்புடையவரான மறவர்க்கு அது இனிதான இசையாகி விளங்குதலால். கடிப்பு - குறுந்தடி; குணில். இகூஉ - புடைத்துக் கொண்டு. புண்தோள் ஆடவர் - முரசைச் சுமந்து சுமந்து தோளிற் புண்பட்ட முரசு முழக்கும் தொழிலோர். போர்முகத்து - போரின் முன்னணிப்புறத்து. இறுப்ப - நிற்க. கரந்தை - கரந்தைச் செடி. மாக்கொடி - கரிய கொடி. விளைவயல் - நெல் விளையும் வயல். இறை கொள்ளல் - தங்கல். களைநர் - துன்பங் களைவோர். பிறர் - தம் மன்னரல்லாத பிறர்; தம் மன்னராற் காக்கவியலாது என்று முடிவு செய்ததனால், 'களைநர் பிறர் யார்?’ என்று கருதலாயினர். பேணி - தம் உயிரைப் பேணியவராக. ஒன்னார் - பகைவர். ஒலி அவிந்து அடங்க - ஒலியவிந்து ஒடுங்கிக் கிடக்க; இஃது அவரும் அஞ்சியவராகத் தளர்ந்தமை கூறியதாம். எயிற் புறத்துப் போர், அதற்குரிய பகைவர் அஞ்சியகலுதலால் நிகழாதேயே சேரலுக்கு வெற்றியாக முடிந்தது என்பதாம்.

பூ - தும்பைப்பூ. மலைந்து - சூடி. உரைஇ - வஞ்சினங் கூறி. தோடு - பனந்தோடு. நிரைஇய - வரிசையாக வைத்துக் கட்டிய. அருஞ்சமம் - வெல்லுதற்கரிய போர். கொன்று - அழித்து. போர் கொல்லல் - போரிடற்கு வந்த படைமறவரை அழித்தல்; போரூக்கத்தைக் கெடுத்தலும் ஆம். புறம் பெறல் - பகைவர் புறமிட்டு ஓடுதலை மேற்கொள்ளுமாறு போரிடல். மன்பதை - மறவர் கூட்டம்; இவர் சேரநாட்டுக் காவன்மறவர்; பகைவரால் அவ்விடத்தை விட்டு ஓட்டப் பெற்றவர். வென்றியாடல் - வெற்றிகொண்டு, அக்களிப்பாலே தோளோச்சி யாடல். திரு - வெற்றித் திருமகள். பொலந்தேர் - அழகிய தேர். கடிவாகை - காவல்மரமான வாகை. முதல் - அடிமரம். தார் - தூசிப்படை.

உன்னம் - உன்னமரம். சாய - சாய்ந்துகாட்ட. வறிது - சிறிது. அரியல் - அரித்துக் கூட்டிய; தெண்கள் - தெளிவாகிய கள். நீர் - அருவிநீர். சிலம்பு - மலை. நேரியோன் - நேரிமலைக்கு உரியவன். 'வயங்கிழையணிந்து, மலர்ந்த வேங்கையின் எழில் நலஞ் சிறப்ப' என்று கொள்ளுதலும் பொருந்தும். களி - களிப்பு. வியன் களம் - பரந்த போர்க்களம். தொழில் - போர்த்தொழில். புகல் - விரும்பும் விருப்பம். சினங்