பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஐந்தாம் பத்து

157

மிகாதும், இருபக்கமும் ஒன்று சேராதும், இடையிற் கம்பிடப் பெற்று விளங்கும்; ஆதலின் ‘நிரம்பகல்பு அறியா ஏணி’ என்றனர். ‘தசும்பு நெடிது நிறைந்தபடியே இராது’ என்றது, வருவார் அடிக்கடி எடுத்துக் குடித்தலால்; நிரப்ப நிரப்பக் குடிப்பாரும் எடுப்பராதலின், அது நிறைந்தபடியே நெடிது இராது என்பதாயிற்று. உண்ண வுண்ணப் பானை நிரப்பப்படுதலைத், ‘தவாஅக் கள்ளின்’ என்று சிறப்பித்தனர்.

44. நோய்தபு நோன்தொடை !

துறை : செந்துறைப் பாடாண்பாட்டு. வண்ணம் : ஒழுகு வண்ணம். தூக்கு : செந்தூக்கு. பெயர் : நோய்தபு நோன் தொடை. இதனாற் சொல்லியது : செங்குட்டுவனை நெடிது வாழ்வாயாக என வாழ்த்தியது.

[பெயர் விளக்கம் : நின்னைப் புகழுதற்குக் காரணமாக விளங்கும் நோயில்லாத யாக்கையாகிய பெரிய உடம்பு என்று சொல்லிய நயத்தால், இப் பாட்டிற்கு இது பெயராயிற்று.]

நிலம்புடைப் பன்ன ஆர்ப்பொடு விசும்பு துடையூ
வான்தோய் வெல்கொடி தேர்மிசை நுடங்கப்
பெரிய வாயினும் அமர்கடந்து பெற்ற
அரிய என்னாது ஓம்பாது வீசிக்
கலம்செலச் சுரத்தல் அல்லது கவினும் 5

களைகென அறியாக் கசடில் நெஞ்சத்து
ஆடுநடை அண்ணல்நின் பாடுமகள் நாணியர்
காணி லியரோகிற் புகழ்ந்த யாக்கை
முழுவலி துஞ்சு நோய்தபு நோன்தொடை
நுண்கொடி உழிஞை வெல்போர் அறுகை 10

சேணன் ஆயினும் கேள்என மொழிந்து
புலம்பெயர்ந்து ஒளித்த களையாப் பூசற்கு
அரண்கள் தாவுறீஇ அணங்குநிகழ்ந் தன்ன
மோகூர் மன்னன் முரசம் கொண்டு
நெடுமொழி பணிந்தவன் வேம்புமுதல் தடிந்து 15