பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆறாம் பத்து

183


இறை கொள்ளல் - தங்கியிருத்தல். அடும்பு - அடும்பங் கொடி. அடைகரை - மக்கள் இறங்கும் துறையுடைய கரைப்பகுதி. அலவன் - நண்டு. வடு - கோடு. அயிர் - நுண் மணல். ஊதை - வாடைக் காற்று. உஞற்றும் - முயன்று வீசும். தூவிரும் - தூய பெரிய. போந்தை - பனை. அணிப் பொலிதந்து - அணிகள் அழகுடன் விளங்கப் பொலிவுடன் வீற்றிருந்து.

இயலல் - நடத்தல். ஒல்கல் - அசைந்தாடல். மடமகள் - இளமகள். வெறியுறு நுடக்கம் - செல்வமேற்று ஆடுதலால் உண்டாகும் அசைந்த ஆட்டம். பெருமலை - இமயம். வயின் வயின் - இடங்கள்தோறும். விலங்கும் - குறுக்கிட்டுக் கிடக்கும். பெருந்தெய்வத்து - பெருந்தெய்வத்து வாழ்வோரும். வளை ஞரலும் - சங்கினம் முழங்கும். பனிப் பெளவம் - குளிர் கடல்; தென்கடல் மணந்த - ஒருங்கே கலந்து கூடியிருந்த, அந்தரம் - மேற்பக்கம். வண்பிணி - வளவிய பிணிப்பு. நறவு - நறவம்பூ. நெய்தற்பூவும் நறவம்பூவும் கண்போல விளங்குவன; இவற்றைக் கலந்து தொடுத்த மாலைகளாலே பந்தரின் மேற்பக்கம் வேயப்பெற்றிருந்தது என்க; இக் காலத்தும் பந்தரின் மேற்புறத்து வரிசைவரிசையாக மாலைகளைத் தொங்கவிடுவதனைக் காணலாம். மடநோக்கு - மடபம் பொருந்திய பார்வை. வாள் நகை - ஒளியுடைய பற்கள். அமிழ்து - வாயமுதம். பொதிதல் - நிரம்பியிருத்தல். துவர் வாய் - சிவந்த வாயிதழ்கள். அசைநடை - அசைந்து அசைந்து நடக்கும் நடை. சான்று - மிகவும் விரும்பி. நீடினை - நெடிதே தங்கினை. வெள்வேல் - வெள்ளிய வேல். மெல்லியன் - சிற்றின்பத்தே எளியன். நின் உணராதோர் . நின் போர் மறத்தை உணராதோரான பகைவர்.

மழை - மேகம். செயிர் - குற்றம்; அது நஞ்சுடைமை. அரவு - பாம்பு. எறிந்து - தாக்கி. மிடல் - வலிமை. புயல் ஏறு - இடியேறு. தாங்குநர் - தடுத்துப் போரிடும் பகைவர். தொடி - பூண். துமிக்கும் - வெட்டி வீழ்த்தும். எஃகு - வாள். வலத்தர் - வெற்றியுடையார். படைவழி வாழ்நர் - படைஞராகப் பணியேற்று வாழ்வோர். ‘நீயும் அரவெறியும் பெருஞ்சினப் புயலேறனையை; நின் படைவழி வாழ்நரும் யானைத் தொடிக்கோடு துமிக்கும் எஃகுடை வலத்தர்’ என்று மற மாண்பை எடுத்துக் கூறுகின்றனர்.

போந்தை - பனை. வெண்தோடு - குருத்தோலை; ஆகு பெயரால் மாலையை உணர்த்திற்று. நிறம் பெயர்தல் -