பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



 
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைக்
குமட்டூர்க் கண்ணனார் பாடியது
 

இரண்டாம் பத்து
பதிகம்

மன்னிய பெரும்புகழ் மறுவில் வாய்மொழி
இன்னிசை முரசின் உதியஞ் சேரற்கு
வெளியன் வேண்மாள் நல்லினி யீன்றமகன்
அமைவரல் அருவி இமையம்விற் பொறித்து
இமிழ்கடல் வேலித் தமிழகம் விளங்கத் 5

தன்கோல் நிறீஇத் தகைசால் சிறப்பொடு
பேரிசை மரபின் ஆரியர் வணக்கி
நயனில் வன்சொல் யவனர்ப் பிணித்து
நெய்தலைப் பெய்து கையிற் கொளீஇ
அருவிலை நன்கலம் வயிரமொடு கொண்டு 10

பெருவிரல் மூதூர்த் தந்துபிறர்க் குதவி
அமையார்த் தேய்த்த அணங்குடை நோன்றாள்
இமைய வரம்பன் நெடுஞ்சேர லாதனைக்
குமட்டூர்க் கண்ணனார் பாடினார் பத்துப்பாட்டு;

அவைதாம்,

(1) புண்ணுமிழ் குருதி, (2) மறம்விங்கு பல்புகழ், (3) பூத்த நெய்தல், (4) சான்ரறோர் மெய்ம்மறை, (5) நிரைய வெள்ளம், (6) துயிலின் பாயல், (7) வலம்படு வியன்பணை, (8) கூந்தல் விறலியர், (9) வளனறு பைதிறம், (10) அட்டுமலர் மார்பன்; இவை பாட்டின் பதிகம்