பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

செல்வக்கடுங்கோ வாழியாதனைக்
கபிலர் பாடியது.

ஏழாம் பத்து
பதிகம்



மடியா உள்ளமொடு மாற்றோர்ப் பிணித்த
நெடுநுண் கேள்வி அந்துவற்கு ஒருதந்தை
ஈன்றமகள் பொறையன் பெருந்தேவி ஈன்றமகன்
நாடுபதி படுத்து நண்ணார் ஓட்டி
வெருவரு தானைகொடு செருப்பல கடந்து 5

ஏத்தல் சான்ற இடனுடை வேள்வி
ஆக்கிய பொழுதின் அறத்துறை போகி
மாய வண்ணனை மனனுறப் பெற்றுஅவற்கு
ஓத்திர நெல்லின் ஓகந்தூர் ஈத்துப்
புரோசு மயக்கி 10

மல்லல் உள்ளமொடு மாசற விளங்கிய
செல்வக் கடுங்கோ வாழியாதனைக்
கபிலர் பாடினார் பத்துப்பாட்டு.

பாடிப் பெற்ற பரிசில்: 'சிறுபுறம்' என்ன நூறாயிரங் காணம் பொன்னும், 'நன்றா' என்னும் குன்றேறி நின்று தன் கண்ணிற் கண்ட நாடெல்லாம் காட்டிக் கொடுத்தலும். வாழியாதன் அரசுவீற்றிருந்தது : இருபத்தைந்து யாண்டுகள்.

பாட்டின் பெயர்கள்: 1. புலா அம் பாசறை, 2. வரை போல் இஞ்சி, 3. அருவி யாம்பல், 4. உரைசால் வேள்வி, 5. நாண் மகிழ் இருக்கை, 6. புதல்சூழ் பறவை, 7. வெண்