பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எட்டாம் பத்து

261

யோர்க்கே வந்தடைவனவாகும்" என்று நீயே அறிவு கூறினை! அவனது கோட்பாட்டினும் வேறுபட்டதான பரந்த இடத்தையுடைய காட்டிற்குச் சென்று தவநெறியில் ஈடுபடுமாறும் நின் தவவொழுக்கச் செவ்வியாலே எடுத்துக் கூறினை! பெருமானே, அதனையே யானும் வியக்கின்றேன்!

சொற்பொருளும் விளக்கமும்: சாய் - நுண்மை: சாய்தலும் ஆம். அறம் - அறல்பட்ட கருமணல். இருங்கூந்தல் - கருங்கூந்தல் வேறுபடு. திரு - திருவினும் வேறானவோர் திருமகள். நின் வழி - நின் குடிமரபு. வாழியர் - வாழும் பொருட்டாக; செய்யியர் என்னும் வாய்பாட்டு வினையெச்சம். கொடுமணம் - ஓர் ஊர். பட்ட -செய்து கொள்ளப்பட்ட. வினைமாண் - தொழில் வினையாலே மாட்சியமைத்த. பந்தர் ஓர் ஊர். பலர்புகழ் - பலரும் புகழ்தலையுடைய. வரையகம் - மலைச்சாரற் பக்கம். குறும்பொறை - குறிய பொற்றைப் பகுதிகள். தெரியுநர் - மான்களின் இருப்பிடத்தையும் வகையையும் தெரிந்தோரான வேடர்கள். சிரறுதல் - சிதறுதல். பொறி - புள்ளி. கவைமரம் - கவறுபட்ட மரக்கொம்பு. கடுக்கும் - ஒக்கும். கவலைய - கவறுபட்டிருத்தலைடைய. புள்ளி இரலை - புள்ளிமான். தோல் ஊன் உதிர்த்து - தோலினின்றும் ஊனைப் போக்கி. தீது - குற்றம். திகழ்விடு - ஒளி விடுகின்ற. பாண்டில் - வட்ட வடிவாக அறுக்கப்பெற்ற தோல்.

மனைவி நல்ல மகனைப் பெறுவதற்கான ஒருவகைத் தெய்வச் சாந்தி முறை இப்பகுதியிற் கூறப் பெற்றுள்ளது.

பருதிபோகிய - வட்டமாக அறுத்துக்கொண்ட. புடை - ஓரங்கள். கிளைகட்டி - முத்துக்களையும் அணிகலன்களையும் இனமாகக் கட்டி. எஃகு - கூர்மை. இரும்பு - இரும்பாலாகிய கருவி. உள்ளமைத்து - உள்ளே கீறியமைத்து. 'வல்லோன்' அந்தச் சாந்தி செய்தலில் வல்லவன். சூடுநிலை - சூடுதற்கான நிலைமை. சுடர்விடு – ஒளிவிடுகின்ற. விசும்பாடு மரபு - விசும்பிற் பரந்து. பருந்து ஊறு அளப்ப - பருந்து அத்தோலை மாமிசமென்று கருதிக் கைப்பற்றுவதற்கு அடையக் கருத. ’எண்ணியல் முற்றி' என்றது பத்து மாதங்களும் நிறைந்து என்றதாம். ஈரறிவு - பேரறிவு; இம்மையறிவும் மறுமையறிவும். புரிந்து - அமைந்து. சால்பு - அன்பு, நாண், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை முதலிய குணங்களின் நிறைவு. செம்மை - நடுநிலைமை. ‘அரசு துறைகள்’ படை குடி கூழ்