பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

262

பதிற்றுப்பத்து தெளிவுரை

அமைச்சு நட்பு அரண் போல்வன. வீறு - சிறந்த சிறப்பு. இவணர் - இவ்வுலகத்தார். கடன் - கடமை. இறுத்த - செய்து முடித்த. செறுப்புகல் - போரை விரும்பும். முன்பன் - வலியுடையோன்.

மருட்சி - மயக்கம்; வியப்பு. நின் வயின் - நின்னிடத்து. ஒழுக்கும் - கடைப்பிடித்துச் செலுத்தும். மூதாளன் - முதியவன். வண்மை - கொடை. மாண்பு - சிறந்த குணங்கள். வளன் - செல்வம். எச்சம் - மக்கள். வேறுபடு - நாட்டினின்றும் வேறுபட்ட காடு; புரோகித நெறியினின்றும் வேறுபட்ட தவநெறி. நனந்தலை - பரந்த இடத்தையுடைய காடு. படிமை - தவ்வொழுக்கப் பெருமை. இதனால், பெருஞ்சேரல் இரும்பொறை இராஜயோகியாக விளங்கினன் எனலாம்.


75. தீஞ்சேற்று யாணர் !

துறை:செந்துறைப் பாடாண் பாட்டு. வண்ணம் ஒழுகு வண்ணம். தூக்கு: செந்தூக்கு. பெயர்: தீஞ்சேற்று யாணர். சொல்லியது: பெருஞ்சேரலின் வென்றிச்சிறப்பு.

[பெயர் விளக்கம்: இனிய பாகானது இடையறவின்றிப் புதுவரவாய்க் கிடைப்பது என்னும் நயம் தோன்றத் ’தீஞ்சேற்று யாணர்' என்றதால், இப்பாட்டு இப் பெயரைப் பெற்றது.]


இரும்புலி கொன்று பெருங்களிறு அடூஉம்
அரும்பொறி வயமான் அனையை! பல்வேல்
பொலந்தார் யானை இயல்தேர்ப் பொறைய!
வேந்தரும் வேளிரும் பிறரும் கீழ்ப்பணிந்து
நின்வழிப் படாஅ ராயின் நென்மிக்கு 5

அறையுறு கரும்பின் தீஞ்சேற் றியாணர்
வருநர் வரையா வளம்வீங்கு இருக்கை
வன்புலந் தழீஇ மென்பால் தோறும்
அரும்பறை வினைஞர் புல்லிகல் படுத்துக்
கள்ளுடை நியமத்து ஒள்விலை கொடுக்கும் 10