பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எட்டாம் பத்து

267

கொண்டது, வெளுத்த வெள்ளுடையைச் சூடியது போலத் தோற்றும் என்க. பாங்கு - முறைமை. தெரியல் - மாலை. மணி - செம்மணி. உழவர் - உழுது பயன் கொள்பவர்; அவர் அத்தொழிலைச் செய்யுங்காலத்தே எதிர்பாராதே கிடைக்கும் செம்மணிகளையும் பெறுவர் என்பதாம்; இது சேரநாட்டின் பலவகைச் செழுமையைக் குறிப்பதாம்.


77. வென்றாடு துணங்கை !

துறை: உழிஞை அரவம். வண்ணம்: ஒழுகு வண்ணம். தூக்கு: செந்தூக்கு.

[பெயர் விளக்கம்: ஊர்களிலே யாடும் துணங்கை போலன்றிப் போர்க்களத்தே பகைவரை வென்று ஆடிய துணங்கை என்ற சிறப்பால், இப்பாட்டு இப்பெயரைப் பெற்றது. "பொதுப்படப் படை எழுச்சி கூறியதனை உழிஞை அரவம் என்றது, அப்படை எழுங்காலத்துக் கோட்டை மதில்மீதிற் போர்குறித்து எழுந்ததை ஒரு காரணத்தால் அறிந்து போலும் என்பது பழையவுரை.]


எனைப்பெரும் படையனோ சினப்போர்ப் பொறையன்
என்றனி ராயின் ஆறுசெல் வம்பலிர்
மன்பதை பெயர அரசுகளத் தொழியக்
கொன்றுதோள் ஓச்சிய வென்றாடு துணங்கை
மீபிணத் துருண்ட தேயா ஆழியின் 5

பண்ணமை தேரும் மாவும் மாக்களூம்
எண்ணற் கருமையின் எண்ணின்றோ இலனே!
கந்துகோள் ஈயாது காழ்பல முறுக்கி
உகக்கும் பருந்தின் நிலத்துநிழல் சாடிச்
சேண்பரல் முரம்பின் ஈர்ம்படைக் கொங்கர் 10

ஆபரந் தன்ன செலவின்பல்
யானை காண்பல்அவன் தானை யானே!

தெளிவுரை: வழியே செல்லும் புதியோரே! "சினத்தோடு போர்ச்செயலிலே ஈடுபடுவோனான நும் பெருஞ்சேரல் இரும்பொறை எத்துணைப் பெரும் படையணிகளை உடையவனோ?” என்று கேட்பீராயின் -