பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/302

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

298

பதிற்றுப்பத்து தெளிவுரை

298 பதிற்றுப்பத்து தெளிவுரை


கால்வல் புரவி அண்டர் ஒட்டிச்
சுடர்வீ வாகை நன்னன் தேய்த்துக் 10


குருதி விதிர்த்த குவவுச்சோற்றுக் குன்றோடு
உருகெழு மரபின் அயிரை பரைஇ
வேந்தரும் வேளிரும் பின்வந்து பணியக்
கொற்றம் எய்திய பெரியோர் மருக!
வியலுளை அரிமான் மறங்கெழு குருசில்! 15


விரவுப்பனை முழங்கும் நிரைதோல் வரைப்பின்
உரவுக்களிற்று வெல்கொடி நுடங்கும் பாசறை
ஆரெயில் அலைத்த கல்கால் கவணை
நாரரி கறவின் கொங்கர் கோவே!
உடலுநர்த் தபுத்த பொலந்தேர்க் குருசில்! 20


வளைகடல் முழவின் தொண்டியோர் பொருந!
நீநீடு வாழிய பெரும! நின்வயின்
துவைத்த தும்பை நனவுற்று வினவும்
மாற்றருந் தெய்வத்துக் கூட்டம் முன்னிய
புனல்மலி பேரியாற்று இழிதந் தாங்கு 25


வருகர் வரையாச் செழும்பல் தாரம்
கொளக்கொளக் குறையாது தலைத்தலைச் சிறப்ப
ஓவத் தன்ன உருகெழு நெடுநகர்ப்
பாவை யன்ன மகளிர் நாப்பண்
புகன்ற மாண்பொறிப் பொலிந்த சாந்தமொடு 30


தண்கமழ் கோதை குடிப் பூண்சுமந்து
திருவிற் குலைஇத் திருமணி புரையும்
உருகெழு கருவிய பெருமழை சேர்ந்து
வேங்கை விரிந்து விசும்புறு சேண்சிமை
அருவி அருவரை யன்ன் மார்பின் 35


சேண்நாறு நல்லிசைச் சேயிழை கணவ!
மாகம் சுடர மாவிசும்பு உகக்கும்
ஞாயிறு போல விளங்குதி பன்னாள்!