பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/311

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒன்பதாம் பத்து

307

மட்டப் புகாவின் குட்டுவர் ஏறே!
எழாஅத் துணைத்தோள் பூழியர் மெய்ம்மறை?
இரங்குநீர்ப் பரப்பின் மாந்தையோர் பொருந!
வெண்பூ வேளையொடு சுரைதலை மயக்கிய
விரவுமொழிக் கட்டூர் வயவர் வேந்தே! 30

உரவுக்கட லன்ன தாங்கருந் தானையொடு
மாணவினைச் சாபம் மார்புற வாங்கி
ஞாண்பொர விளங்கிய வலிகெழு தடக்கை
வார்ந்துபுனைந் தன்ன ஏந்துகுவவு மொய்ம்பின்
மீன்பூத் தன்ன விளங்குமணிப் பாண்டில் 35

ஆய்மயிர்க் கவரிப் பாய்மா மேற்கொண்டு
காழெஃகம் பிடித்தெறிக்கு
விழுமத்தின் புகலும் பெயரா ஆண்மைக்
காஞ்சி சான்ற வயவர் பெரும!
வீங்குபெருஞ் சிறப்பின் ஓங்குபுக ழோயே! 40

கழனி உழவர் தண்ணுமை இசைப்பின்
பழன மஞ்ஞை மழைசெத்து ஆலும்
தண்புனல் ஆடுநர் ஆர்ப்பொடு மயங்கி
வெம்போர் மள்ளர் தெண்கிணை கறங்கக்
கூழுடை நல்லில் ஏறுமாறு சிலைப்பச் 45

செழும்பல இருந்த கொழும்பல் தண்பணைக்
காவிரிப் படப்பை நன்னாடு அன்ன
வளங்கெழு குடைச்சல் அடங்கிய கொள்கை
ஆறிய கற்பின் தேறிய நல்லிசை
வண்டார் கூந்தல் ஒண்டொடி கணவ! 50

நின்னாள், திங்கள் அனைய வாக; திங்கள்
யாண்டோர் அனைய வாக: யாண்டே