பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் பத்து

29


நின் மறம் வீங்கு பல்புகழ் முன்னர்க் கேட்டற்கு இனிதாயிருந்தது; நின் பெருங்கலி மகிழ்வாகிய இதுதான் இன்று கண்ணாற் காணற்கும் இனிதாயுள்ளது என்பதாம்.

சொற்பொருள்: வயவர் - வலிமையாளர். சேரலாதனை எதிர்த்துக் களத்திற்கு வருவதற்கும் பேரளவு வலிமை வேண்டும் என்பதனாலே, அவ்வாறு வலிமையோடும் துணிந்து வந்தாரை ‘வயவர்’ என்றனர். அவர் பட்டு அழியவே, பிறர் அஞ்சித் தாமே பணிந்துபோவாராயினர் என்று கொள்க. வாளர் - வாள் மறவர். மயக்கி - சிதைத்து. கடும்பு - சுற்றம்; படைஞர், அமைச்சர், ஒற்றர் ஆகியோர். ‘தலை’ என்றது, தலைவனை.

தார் - பிடரி மயிர்; மாலைபோலக் கழுத்துப் புறத்தே தூங்குதலால் ‘தார்’ என்றனர். வார் - நெடிய; ‘அல்’: அசை வழங்கல் - திரிதல். - தோடு - தொகுதி. துயில் ஈயாது - துயில் பெறாது. மாதிரம் - திசைகள் பல் புகழ் - பலவான புகழ்; பல களத்தும் கொண்ட வெற்றிப் புகழும் ஆம். குளவி - காட்டு மல்லிகை. வாடா - உதிராத; பிறந்த போதுள்ள மயிர் உதிர்ந்து வேறுமயிர் புதுவதாக முளையாத. பைம் - பசுமையான; பசுமை என்றது மென்மையையும் அடர்த்தியையும் குறித்தது. ஆடுநடை அசைந்தசைந்து நடக்கும் தளர் நடை. அண்ணல் - தலைமை.

ஞிமிறு - வண்டு, பிடிய - பிடியைக் கொண்ட நீந்தி - முயற்சியோடும் மெல்லமெல்லக் கடந்து சென்று. தொல் பசி - பழம் பசி, தொடர்ந்து வருத்திய பசித்துன்பம். பழங்கண் - வருத்தம். எஃகு - வாள். வால் - வெண்மையான. மையூன் - ஆட்டுத் தசை. வெண்ணெல் - ஒருவகை நெல்; வெள்ளைச் சம்பா நெல் ஆகலாம்; தென்னாட்டுப் பகுதியிலே ‘வெள்ளை’ என வழங்கப்படும் நெல்வகையும் ஆகலால். நனை - பூவரும்பு. தேறல் - கள்ளின் தெளிவு. இருஞ்சிறகு - பெரிய சிறகு. சிதாஅர் - கந்தல்பட்ட துணி. நூலாக் கலிங்கம் - பட்டு; நூலாலாகிய கலிங்கமும் ஆம். வாங்கு - வளைந்த. வணர் - சுருண்ட. வகையின் - குற்றமற்ற; குற்றமாவது, பிறர் பழிக்கத்தக்க குறைபாடு உடைமை. மெய்யமர்பு யாத்த - உடலோடு விரும்பிக் கட்டிய. கலி - ஆரவாரம்; பெருங்கலி - அரசனது ஆரவாரமிக்க திருவோலக்கக் காட்சி.

விளக்கம் : கேள்வியானே மட்டுமே நின்னைப்பற்றி அறிந்து கற்பனையாலே இன்புற்ற யாங்கள், நின்னாலே