பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/81

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

மூன்றாம் பத்து

77


பொருள் கொள்க. அரசவினைக்கண் இவை யாவும் வேண்டுவதே! எனினும், இவை அளவிறப்பின் அதனாற் கேடும் வந்து சூழும் என்பதாம். 'அச்சம் உடையார்க்கு அரணில்லை' (குறள் 534) என்பதனால், அச்சத்தின் தீமை பெறப்படும்; அது அரசனின் உளத்திண்மையைச் சிதைத்தலின் குற்றமா யிற்று, இஃதன்றி 'அஞ்சுவதஞ்சல் அறிவார் தொழில்' என்றதனால் அஞ்சவேண்டுமவற்றுக்கு அஞ்சுதல் விலக்கப்படுவதன்று என்பதும் அறிதல்வேண்டும். தெறல் - தண்டித்தல். அறம் தெரி திகிரி - அறம் நிலைபெறப் பொருட்டாக ஆராய்ந்து செலுத்தப் பெறும் அரசமுறைமை. வழியடை - தடை. சேணிகந்து - நெடுகிலும் கைவிட்டு ஒதுக்கி. மை - குற்றம். பாத்து - பகுத்து. ஊழி - நெடுங்காலம். உரவோர் - அறிவும் ஆற்றலும் உடையோர்; குட்டுவனின் முன்னோர். உம்பல் - வழித்தோன்றல், அரசு முறை கோடாது நடைபெறுதலால் மக்களும் நெறிபிறழாதாராய் ஒழுகுவர் என்பார், அவர்தம் ஒழுக்க நெறியையும் காட்டினார். இவை இரண்டும் பொருந்த ஆட்சி செய்தவர் குட்டுவனின் முன்னோர் ஆவர்.

பொன் . இரும்பு; கரும்பொன். கணிச்சி - குந்தாலி; பாறையுடைக்கும் கருவி. திண்பிணி - திண்மையான பிணிப்புடைய பாறை; பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை. பிணி - பிணிப்பு முதனிலைத் தொழிற்பெயர். உடைத்து - உடைக்க சிரறுதல் - சிதறுதல். சில -சிறிது; சின்மை. சிறுமைப் பொருளது. பத்தல் - குழி; சிறு கிணறு. மிக ஆழத்து அமைத்து சிறிதளவே நீருள்ள கிணறு; ஆதலின் குறுமுகவையிற் கயிறுகட்கு நீரைச் சேந்த முற்படுங்காலத்துப் பலசமயங்களில் வெறுங் குறுமுகவையே மேலே வர, நீர்க்கு அவாவி நிற்கும் ஆணினம் அதனை மறைத்துக்கொண்டே போய் நிற்கும் என்க. 'குறுமுகவை' என்றதனால், நெடுங்கயிறு என்று கொள்க. "கொங்கர் - கொங்குநாட்டார்; இவர் நாடு சேரநாட்டைச் சார்ந்து விளங்கியது; சில சமயங்களில் பாண்டிநாட்டாரும் கொங்கு நாட்டை ஆண்டனர். வேல் கெழு தானை - வேல்மறவரை யுடைய தானை. கொங்கையும் குட்டுவன் தன் ஆட்சிக்கீழ்க் கொண்டிருந்தான் என்பதாம்.

உளை - தலையாட்டம், இழை - வெற்றிப்பட்டம், பொன்னரிமாலை முதலியன. வம்பு - தேர்ச்சீலை, எதிர்ந்த - முற்படுகின்ற. புகல் -விருப்பம்; அது போரியற்ற வேண்டு