பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

பதிற்றுப்பத்து தெளிவுரை

&g பதிற்றுப்பத்து தெளிவுரை

மகிழ் மகிழின், யார்க்கும் எளிதே தேர் ஈதல்லே (புறம் . 123) என்னுமாறு போலக், கள்வெறியால் அவற்றைத் தந்தானல்லன் என்பார், சிறுமகிழானும் என்றனர். பெருங் கலம் வீசல் அவன், தன் தகுதிநோக்கிச் செய்ததாகும்.

மருது: மருதமரம். இழிழ்தல் - இனிதாக ஒலித்தல். நளி - செறிவு. துறை - நீரில் இறங்குதற்குரிய நீர்த்துறை. காஞ்சி - ஒருவகை மரம்: காஞ்சிரம் என்றும் சிலர் கூறுவர். முருக்கு - முள்ளுமுருக்க மரம்; இதன் பூக்கள் தீப்போற் சிவந்த நிறமுடையன; வெள்ளைப் பூக்களைக் கொண்டவை யும் உள்ளன; இங்குக் குறித்தது சிவப்புப் பூக்களையுடைய மரம்; இதனைக் கல்யாண முருங்கை என்பர். தாழ்பு - தாழ்ந்து தொங்குதல். உறழ் ஒத்த உவம உருபு. செந்நிறப் பூக்கள் படிந்திருத்தலால் பொய்கைக் கரை நெருப்புப் படிந்தாற் போலத் தோற்றியது என்றனர். கழனி வாயில் பழனம் . வயல்களுக்கு முன்பக்கமாக அமைந்துள்ள குளம்: மருத நிலத்து இவை பரவலாகக் காணப் பெறுவன. படப்பை . விளை நிலங்கள். மருள் - உவம உருபு. வளைமகள் . வளையணிந்த குறுமகள். குறுதல் - பறித்தல். குறுமகளிர் தழையும் பூவும் கொய்து விளையாட்டயர்தலால் சிதைந்த காஞ்சி என்க: இந் நயம்பற்றி இப்பாட்டின் பெயர் அமைந் தது என்பர். இவை, குட்டுவளுேடு போரிடா முன்னர் விளங் கியூ பகைவர் நாட்டு வளங்களாம்.

நயந்து - விரும்பி; விருப்பம் ஆவது, சேரலாதன்பாற் பரிசில் பெறுதல். வழங்குநர் - வழிச் செல்வார். மருங்கு - வழி. தூர்ந்து - இல்லையாகும்படி புல்லால் மூடப்பெற்று. கவின் . அழகு. ஆற்ற - வழியிலுள்ள. ஏறு - மரையாவின் ஏறு மரையா - காட்டுப்பசு. அமர்தல் - விரும்புதல். வைப் பின - ஊர்களையுடைய நாடு. வைப்பு - ஊர். மைந்து - வலிமை. மலிதல். மிக்குப் பெருகுதல். பெரும் புகழ் - பெரி தாக எழுந்த புகழ்: அது மறம் வீங்கு பெரும் புகழ் என்பவர், மைந்து மலி பெரும்புகழ் என்றனர். மலைதல் - போரிடல். போரெதிர் வேந்தர் . ப்ோருக்கு எதிர்ப்பட்ட பன்கவேந்தர். தார் . தூசிப் படை.

முன்னர் யாம் கண்ட வளநாடு, இடையில் நின்னைப்

பகைத்த பொருந்தாச் செயலின் பயனுல், இப்போது காடா கக் கிடந்த அவல நிலையைக் கண்டு வந்தோம் என்பதாம்.