பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/102

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
99

கல்வியும் நன்னடத்தையுமுள்ளோரைப் பார்த்துத் தாசீல் உத்தியோகத்துக்கு நியமித்து அலுவல்களை நிதானமா யோசித்து நடத்தும்படிச் செய்யக் கட்டளை.

(3) ௰–வது பக்கம், ௨௭–வது வரியில் சேர வேண்டிய நோட்டு. ரிவின்யு டிபார்ட்டுமெண்டில் பெரும்பாலும் தேசஸ்த பிராமணாள் இருக்கிறார்களென்பதைக் காட்டத் கூறியது. ௲௮௱௫௰௫ ௵ மார்ச்சி ௴ ௫௨ ரிவினியு போர்ட்டு உத்தரவினால் கலக்ட்டர் கச்சேரியில் இரண்டு சிரஸ்தாதாரர்களும் தேசஸ்த பிராமணாளாக இருக்கக் கூடாது. பிராமணாளைப் போலவே மற்ற ஜாதி ஜனங்களும் தாசீல்தாரர்களாக நியமிக்க வேணுமென்று கட்டளை.

(4) ௰௨–வது பக்கம், ௪–வது வரியில் சேர வேண்டிய நோட்டு. ௲௮௱௫௰ ௵ நவம்பர் ௴ ௰௪௨ உத்தரவினால் முன் எச்சரிக்கை கொடாமல தாலுகா கஜானாவை அப்போதைக் கப்போது கலட்டர்கள் ஜட்தி பார்த்து வரவேண்டுமெனக் கட்டளை.

(இதில் வரும் எண்கள் அனைத்தும் தமிழ் எண்களாகவே உள்ளன.)

(5) குறிப்பு: தாசில்தார் மிகுந்த கோபத்தோடு ஏமக்காளை உதைக்கச் சொல்லிச்சொன்ன மாத்திரத்தில் யமகிங்கிரர்கள்போல அவரிடத்திலிருக்கும் சேவகரில் – ரங்கன் – ஏமக்காளைக் கன்னத்திலடிக்க, கவனப்பன் – அடிவயிற்றில் காலாலுதைக்க, ஏமக்காள்–பேச்சற்று மூச்சித்துத் தரையில் விழுந்தபோது சேவகர் சொல்லுகிற விதங் காண்க.
— அடுத்தது பாட்டு (தாளராகத்துடன்)