பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/113

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
110

(9) முத்துக்குளியல் பற்றி

திருநெல்வேலிச் சீமையின் கலைக்கிட்டuqகிய மேஸ்தர் ருபர்ட்டு யீடன் துரையவர்கள்

இதுனாலே சகலமான பேர்களுக்குத் தெரியும்படி பிரசித்தம் பண்ணுகிறதென்னவென்றால் திருநெல்வேலி சீமையைச் சேர்ந்த கடல் துரைமுகத்தில் வருகிற அக்டோபர் ௴ ௰௫௨ முதல் இங்கு குளிக்கிறதற்காக ஒரு வருஷம் ரெண்டு வருஷம் அல்லது மூன்று வருஷம் குத்தகைக்கு நாளது ௲௮௱௩௫ ௵ அக்டோபர் ௴ ௫௳ வரைக்கு நம்முடைய அசூர் கச்சேரியில் தற்காஸ்து குடுத்தால் வாங்கித் கொள்ளப்படும்.

(17–8–1885).

R. Eden. Collector


இவ்வாறாக அரசாங்க ஆணை முதலியனவன்றி, தனிட்பட்டவர்கள் நிலம், வீடு முதலியன வாங்கவும் விற்கவும் பதிவு செய்ய ஆவணக்களரியில் எழுதிய பத்திரங்களுள் பல தமிழ் உரைநடையிலேயே இருக்கின்றன.

(10) அளம் கணக்கு:—(பல எழுத்துக்களுக்குப் புள்ளியில்லை)

சென்னப்பட்டணம் கலெக்டராகிய ம-௱-௱ ஏ ரோபர்ட்சன் துரையவர்கள் சமுகத்துக்கு எண்ணூர் அளம் கணக்கு முத்தப்பிள்ளை எழுதிக் கொடுத்த அத்தாட்சி.

என்னவென்றால் எண்ணூர் அளங்குடியாகிய தோணி சின்னவெங்கட்டராமன், இருங்குன்றம் கிருஷ்ணப்ப நா. கையில் மதத்துவாங்கிக் கொண்டதாய், தன் பேரிலிருக்கிற அளம்-கதெ-உம் அவன் பேராலும் சர்க்கார் கணக்கில் தாக்கல் செய்து கொடுக்க வேணுமென்று ஆசூரில் அர்ஜி கொடுக்க அந்த அரிஜிப் படிக்குச் செய்து கொடுக்கக் கூடா தென்று, முன்னே அக்ஷேபித்திருந்தவர்களாகிய, மேற்படி சின்ன வெங்கட்ட