பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/144

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
141

தனித்திருந்தமையின் ஆற்றலின்றாலோவெனின், அற்றன்று-கொடைமடங்குறித்த குணங்காரணமாக வந்த இவ்வள்ளலென்னும் பெயர் தன்னுறுப்புகளுட் கொடை, குணம், புகழழகு, வளமென்னு நால்வகை குறித்த பல்பொருட் பகுதியாய வண்மையென்னு முதலுறுப்பான் ஆசிரியர்க் குளவாய அக்கொடை முதலிய அருட்குணங்களைக் குறிப்பிற் புலப்பட விரித்தலிற் பொருளாற்றல் உண்டென்க. அல்லது உம், இப்பெயர் உயர் பொருட்கிடனாய், உடனிலைக் கூட்டாய் ஒரு நெறியசைந்தாய், ஓரினந் தழுவிப் பல்வகைக் குறிப்பிற் படர்ந்து முற்றியைபு வண்ணப் பெருஞ் சொல்லாக நிற்றலிற் சொல்லாற்றலும் உண்டென்க. ஆயின் இவ்வாசிரியர் பெயர் இச்செய்யுளின் இடைகடைகளின் ஒன்றினிறுத்தாது முதலடி முதற்சீரெதுகைத் தொடைக் கணிறுத்ததிற் குறித்த தியாதோவெனின் :-ஒன்றிரண்டெனக் கொண்டுறு மறையாகம நன்றிரு முடிபினடுநிலை நாடா அய்ம்புலம் பெறு தத்துவ நியதியிற் போந்து, உண்மலந்தெழுமறிஞர் வாழ்த்திப் பரவும் ஆசிரியர் சன்மார்க்க முதலிய மார்க்க நான்கனுட் டலைமையிற்லைமையாய வுத்தம சன்மார்க்கத்தின ரென்பது குறித்த தென்க. இங்ஙனம் உத்தம சன்மார்க்கத்தினரென்பதை யாசிரியர் கூறிய “இதுவென்ற தெல்லாம் பொய் யென்றன்” என்னுந் திருவெண்பாவாற் காண்க. இஃதின்னும் விரிக்கிற் பெருகும்.

(திருவருட்பா, முதல் ஐந்து திருமுறைகள்-சன்மார்க்க சங்க வெளியீடு-பக். 125, 126.)

வள்ளலார்:—

சத்தியச் சிறு விண்ணப்பம்

எனது விருப்ப முயற்சி இங்ஙனமாக, அவத்தைக ளெல்லாவற்றையும் நீக்கி, இத்