பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/147

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
144

புத்திமதிகள் அடிக்கடி தெரிவித்தனுக்கிரகிக்கும்படி தங்களுபய சரணார விந்தங்களை அஷ்டாங்க பஞ்சாங்க யோகாங்கமாய் பிரார்த்திக்கின்றனன்.

இப்படிக்கு,

பிரபவ ௵

தொண்டன்,

ஆடி ௩ ௳

கி. துரைசாமி.

(புதுவை ஸ்ரீ துரைசாமி அவர்கள் எழுதியது)

இவை கூடலூரில் மகாகனம் பொருந்திய அய்யா அவர்கள் சமுகத்துக்குக் கொடுப்பது (திருவருட்பா-பாலகிருஷ்ணப்பிள்ளையவர்கள் பதிப்பு.)

சென்ற நூற்றாண்டின் ஆறுமுக நாவலரிடமும் வேறு சிலரிடமும் தமிழ் கற்ற யாழ்ப்பாணம் சபாபதி நாவலர் என்பார் சென்ற நூற்றாண்டின் இறுதியிலே (1899) ‘திராவிடப் பிரகாசிகை’ என்ற இதழை வெளியிட்டுள்ளனர். அவர் முன்னர் வாழ்ந்து, தமிழ் உரைநடையை வளம்படுத்திய சிவஞான முனிவருடைய நூல்களைத் தொகுத்துள்ளார். அத்தொகுப்பின் முன் 'வரலாறு’ என்ற தலைப்பில் அவர் தம் விளக்கம் உள்ளது. அவர் உரைநடைக்கும் அது சான்றாகலாமன்றாே?

இனி, இவ்வகச் சமய முதலிய வனைத்திற்கும் மேலாய் விளக்கமுற்று, அவையெல்லாந் தன்கண் ஏகதேசமாய் அடங்கக்கொண்டு நிற்பது சித்தாந்த சைவம். அது வேதாகம மிரண்டாலுந் தலையான சன்மார்க்கமென்றெடுத்துப் புகழப்படுஞ் சுத்தாத் துவித சித்தாந்த சமயம். இனித் தமிழின் கண் அப்பொருள் போதிக்கும் உண்மை நூல்கள், தமிழ் வேதமாகிய திருமுறைகளும், திருக்குறளும், சிவஞான போதம், சிவஞான சித்தி, சிவப் பிரகாச முதலிய சித்தாந்த சாத்திரங்களுமாகும்.