பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/152

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
149
நிலைமையாகவுடையவர். சைவர்களை ஏகாங்கி வென்றாெரென்று ரெட்டியாரும், அவ்வேகாங்கி சைவர் முன்னிற்கவுந் திறமற்றவரென்று யாமும் பேசுவதிற் பயனில்லை, எதிரியினது சித்தாந்தத்தைப் பத்திரிகை வாயிலாக நிறுத்துவதே அழகாம் .....

சூளை சோமசுந்தரநாயகர் அவர்கள் எழுதிய சமயதர்க்க நூல்கள் பல. அவற்றுள் ஒருசிலவற்றை ஈண்டே குறித்தல் நலமாகும். 1. சுக்லாம் பரதர சுலோக விசாரம். 2. சிவ தத்வ சிந்தாமணி, 3. சிவபாரம்யப் பிரதரிசிநி, 4. சமரச ஞானதீபம், 5. ஆபாச ஞான நிரோதம், 6. ஸ்ரீசேக்கிழார் திருவாக்குண்மை 7. ஆர்சார்யப் பிரபாவம், 8. சித்தாந்த சேகரம், 9. சிவாதித்ய ரத்னாவளி, 10. பிரஹ்மதத்வ நிரூபணம், 11. சித்தாந்த ரத்நாகரம்—பிரம்ம வித்யா விகற்ப நிரசநம் முதலிய பல நூல்களை அவர் இயற்றியுள்ளார். அவருடைய சித்தாந்த ரத்நாகரம் என்ற நூலிலிருந்து ஒரு பகுதியைக் காண்போம் (1881).

சித்தாந்தம் முடிவு எனும் பொருள்படும். எனவே தனக்குமேல் ஒரு கொள்கையற்றது. இம் முடிபு பெறப்பட்ட முடிபேமுடிபெனவும்,அதுவே சித்தாந்தம் எனவும் பெறப்பட்டது. ஆகவே இது ஆகம முடிபு எனப்படும்.வேதம்.சிவபெருமானால் சொல்லப்பட்டது.வேதமே சிவாகமம். சிவம் சகல கேவலங்களிற் றோயாத நின்மலப் பொருள். அச்சிவத்துக்கு வேறாகியஆன்மா அதனை அநுபவித்தற்குரியது. சிவனைப்போல் ஆன்மாவும் பிரகாசனமாய் விளங்குவதால் சிவன் அருளைத் தர ஆன்மா அதனைப் பெறவும் இடம் பெறாது. ஆன்மா மலத்தாற் பந்திக்கப்பட்டு அதுவாயொழிதலால் சிவத்தினருளைப் பெற்று இயங்கும் தன்மை வாய்ந்தது. ஆன்மாவைச் சித்தசித்து எனச் சிவாகமம் கூறும்; சதசத்து என்றும் கூறும்.