பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/166

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
163

முகவுரை: எல்லா வுவகங்களையு முயிர்களையும் படைத் திரணங்கொடுத் தரசாட்சி செய்யுஞ் சருவ வல்லமையுள்ள கடவுளான அல்லாவுக்கும் அல்லாவுடைய றதுலுக்கும், வேதத்திற்கும் முடிபு நாளைக்கும், ஈமான் கொண்டிசுலாத்தினெறிமுறை நடாத்து மூமீன் முசீலிமான, அஷறாபுள்ள எமதன்புற்ற வுடன்பிறப்பாளர்கள் யாவருக்குந் தெரிவிப்ப தியாதெனில்...

5. முகமது மார்க்க மகுத்துவ சிங்காரம்:

ஓ! சிநேகிதர்களே லாபத்துடன் முதலைப் பெற்றுக்கொள்ளுங்கள். மேலும் இந்த சாறா அம்மாளுக்கு அடைபட்டிருந்த கற்பந் துறக்கப்பட்டு ஈசாக்கு நபி பிறந்தார். அதேதெனில் ஹாஜிறா அம்மாளுடைய பாத விசேஷத்தினால் பிறந்ததாய் விளங்குகிறது.

கிபாயத்துல் இசுலாம். ஹிஜறத்து திவாசலிங் ௲௳௱௪௰௩ (கி. பி. 1880)

ஈமாநுண்மை—இசுலா நன்மை என்னும் ஹக் சீகத்துல் இஸ்லாம்.

6. சதுஞானிகள் சரித்திரம்: 1877 பிப்ரவரி-அப் துர் காதர் சாயபு இயற்றியது.

கதையின் துவக்க வரலாறு:

அல்லாசுபகானுத்த ஆலாவினுடைய கிருபையிலுைம் முகமதுநபி சல்லல்லாகு அலைகிலே வசல்ல மவர்களின் பருக்கத்தினாலையும் இந்த சாதுர்விஷ் என்னும் இஸ்லாவைச் சொல்ல ஆரம்பிக்கிறேன். இதை அறிவுந் தெளிவுமுள்ள ஆசை யுடையோர்கள் இன்புற்று விருப்பத்தோடு காதுக் குளிரவுங் கல்பு மகிழவுங் கேட்டிடுங்கள்.