பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/173

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
170
சர்வ வல்லவரு நித்தியருமாகிய சர்வேஸ்வரா! என் பாவங்களா லெனக் குண்டான வசுத்தத் தனமும் வருகிறதாயிருக்கிற நித்திய ஆக்கினையும் பச்சாதாபத்தால் நிவாரணமாயிற் றென்று நம்புகிறேன் சுவாமி. (பக்.363)

இது நூலின் நடை. மேலே பாயிரத்தில் கண்ட குறிப்பு நூல் வெளியிடுங் காலத்தில் எழுதிய ஒன்றாகும். எனவே சென்ற நூற்றாண்டிலும் அதற்கு முன்பும் தமிழில் கிறிஸ்தவ சமயம் பற்றி எழுந்த நூல்கள் பல வடமொழிச் சொற்களை அதிகம் எடுத்தாண்டமைக்கும் இலக்கண எல்லையை இகந்த மைக்கும் மிகக் கொச்சை மொழியிலே எழுதியமைக்கும் உரிய காரணத்தை இப்பாயிரத்தால் ஓரளவு உணர்ந்து கொள்ளலாம். -

கிறிஸ்தவ சமயம் பற்றி இவ்வாறு எழுதப்பெற்ற நூல்கள் எண்ணற்றவை. இலண்டன் நகரக் காட்சிச் சாலை நூல்நிலையப் பட்டியலிலும், சென்னை அரசாங்கப் புத்தக விவர வெளியீட்டிலும் இத்துறையில் பல நூல்கள் வெளி வந்துள்ளமையைக் காணமுடிகின்றது. அவற்றையெல்லாம் ஈண்டு விளக்கிக்கொண்டிருத்தல் தேவையில்லை.

கிறித்து நெறியின் வேறுபாட்டுக் கொள்கைகள் பற்றி முன்னரே கண்டோம். அக் கொள்கையுடையார் ஒருவர் மற்றவறைப் பழிக்கும் வகையில் சில நூல்கள் சென்ற நூற்றாண்டில் வெளிவந்துள்ளன, அவற்றுள் ஒன்று இராஜரிஷி ஞானப்பிரகாசர் என்பவரால் இயற்றப்பெற்ற, வேதப் புரட்டலை நீக்கும் சஞ்சீவியாகிய மெய்ஞ்ஞான திருச்சபையின் விளக்கம் என்பதாகும். இந்நூல் 1841 இல் வெளியானது. அதுபற்றி அவரே,

உரோமன் கத்தோலிக்குத் திருச்சபை யென்பது பரம கர்த்தராகிய இயேசுகிருஸ்துநாதர் ஸ்தாபித்த சத்தியத்தின் துணாகவும் ஸ்திவாரமாகவுமிருக்கின்ற தென்றும் புரோடெஸ்டாண்டு மதங்கள்