பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/180

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
177

ஏற்பாட்டின் படி ஓர் உபந்நியாசமாக எழுதப்பட்டு, திருவனந்தபுரம் சர்வகலாசாலையில் வாசிக்கப்பட்டது. வேறு பல வேலைகளிடையில் அவசரமாய் எழுதப்பட்டமையால், சொற்குற்றம், முறை வழு, இவை இப்பொது வியலில் இல்லாதனவாகா! ஆயினும் ஆன்றாேர் அவற்றை ஒழித்து இச்சிறு நூலைப் பொதுவாக அங்கீகரிப்பாராயின், இதில் குறிக்கப்படும் சில தலைமையான சாஸ்திரங்களின் முக்கிய முடிபுகளை இவ்வாறே விளக்கி இந்நூற்றாெகை விளக்கத்தின் ஒவ்வோரியலாக இயற்ற வேண்டுமென்னுங் கருத்துடன் இது வெளியிடப்படுகிறது.

திருவனந்தபுரம்,

பி. சுந்தரம்பிள்ளை.

௧௦௬௩௵ மேடரவி (May 1888)

தொன்னூல் விளக்கம் முகவுரை-இரண்டாம் பதிப்பு 1891 ஆகஸ்டு

செந்தமிழ்க்குரிய ஐத்திலக்கணத்தை சுருக்க மாகவும், தெளிவாகவும் தெரிவிக்கும் சிறந்த நூல் வேறின்மையின் இதனை மானாக்கருக்குப் பிரயோஜனமாக இரண்டாந்தரம் அச்சிற் பதிப்பிக்க வேண்டுமென்று நான் விரும்பி இராயப்பேட்டை உவெஸ்லியன் மிசியோன் காலேஜூ தமிழ்ப் பண்டிதரும் என் நண்பருமாகிய ம-௱-௱-ஸ்ரீநீநிவாச ராகவாச்சாரியார் அவர்களை இதைப் பார்வையிடும்படி, கேட்டுக்கொள்ள அவர் இதைப் பழைய பிரதியுடன் ஒப்பிட்டுப் பரிசோதித்துத் தர, அதை நான் முதற்பதிப்பைப் போலன்றிச் சூத்திரமும் உரையும் நன்கு விளங்குமாறு குத்திரத்தைச் செய்யுள் போலப் பெரிய எழுத்திலும் வசன ரூபமாயிருக்கும் உரையைச் சிறிய எழுத்திலும் பதிப்பித்து, அதிகாரம், இயல். ஒத்து முதலியவற்றிற்குத் தக்கவாறு இங்கிலீஷ் பெயரும் எடுத்துக் காட்டியிருக்கிறேன்.