பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/182

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
179


சிறப்பிக்க முயன்றது திருவாவடுதுறையாதீனத்தார்க்குத் தகுந்த செய்கையன்றென்பது சைவ சமயாபிமான முடையோர் அனைவராலும் ஒப்புக் கொள்ளற் பாலதேயாம்,

இந்தப் பகுதியால் அவருடைய சைவப்பற்று மிக்குத் தெளிவானதோடு, வேற்றுச் சமயத்தாரிடம் கொண்ட காழ்ப்பும் நன்கு தெரிகிறது. இலக்கணவிளக்கம், நன்னூல் இரண்டையும் உணர்ந்தவர் இவர் கூறுவனவற்றைச் சரியென்று கொள்வார்களோ? காலமே அவர் கூற்றை மறுத்து நன்னூலை வாழவைத்து மற்றதைப் பின்தள் விட்டதே. எனினும் சிறந்த ஆசியராகிய இவர் சமயப் பற்றே பற்றாகக்கொண்டு பிறவற்றைக் காண மறுக்கின்றார். இவர் வேறு பல நூல்களையும் பதிப்பித்தார் எனக் காண்கின்றாேம். இவர் போன்றே சென்ற நூற்றாண்டில் திருத்தணிகை வீரசைவர் விசாகப்பெருமாளையர், மகா வித்வான் மயிலை சண்முகம்பிள்ளை, களத்தூர் வேதகிரி முதலியார் முதலிய அறிஞர்கள் சில நூல்களை வெளியிட்டுள்ளனர். டாக்டர் உ. வே. சாமிநாத ஐயர் அவர்கள் பல நூல்களை வெளியிட்டமை நாடறியும். அவர் சிந்தாமணிக் களித்த முன்னுரையில் ஒரு பகுதியைக் காணலாம்.

சீவக சிந்தாமணி: முதற்பதிப்பின் முகவுரை.

இச் சீவக ப்ந்தாமணியை உச்சிமேற் புலவர் கொள் நச்சினார்க்கினியா ருரையுடன் பல பிரதி ரூபங்களைக்கொண்டு நன்றாகப் பரிசோதித்து எழுதுவோரால் நேர்ந்த வழுக்களை மாற்றி, பலருக்கும் பயன்படும் வண்ணம் அச்சிடுவிக்க முயலும்படி சில வருடத்திற்குமுன், சேலம், ம-௱-௱-ஸ்ரீ இராமசாமி முதலியாரவர்கள் பலமுறை வற்புறுத்திக் கூறி எனக்குத் தம்பாலிருந்த கையெழுத்துப் பிரதியையுங் கொடுத்தார்கள்.

யான் அவ்வாறு செய்தற்கு அநருகனாயினும், உலோகோபகாரிகளாகிய அவர்கள் சொல்லை மறுத்தற் கஞ்சியும். கல்விமான்களுக்குக் கருவூலம்