பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/189

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
186
(இங்கிலாந்து தேச சரித்திரம், 1858)
ஆதிகாலத்தில் பிரித்தன் என்னுந்தீவு இருந்த நிலைமையை விசாரிக்கும்பொழுது, அத்தீவு இப்பொழுது இருக்கிற நிலைமைக்கும், அப்பொழுது இருந்த நிலைமைக்கும் அதிக வித்தியாசம் உண்டென்று தெரியவருகிறது, எப்படியெனில், அக் காலத்தில் அத் தேசமானது பலவிதமான கிராதர் அலைந்து திரிந்த காடே அல்லாமல் வேறல்ல. அந்தச் சாதியார் யாரெனில் பிரித்தனுக்கு அயல் சீமையாகிய காள் (GAUL) என்னும் பிரஞ்சு தேசத்திலிருந்த காளியர் அல்லது கெல்தியருக்கும் (CELTS) பூர்விக பிரித்தானியருக்கும் பாஷையும் ஆசாரங்களும் ஒன்றாயிருந்தமையால்’ இவர்கள் அவர்களோடு சம்பந்தப்பட்டவர்கள் என்று நினைப்பதற்கு இடமுண்டு.

இவ்வாறு, குறளை உலகறியச் செய்த போப் என்னும் ஆங்கிலநாட்டு அறிஞர் தமிழ் உரைநடையிலும் சிறந்த நூல்களை நமக்குத் தந்துள்ளார். இவர் போன்றே தமிழ் மொழியின் ஏற்றத்தை உலகுக்கு உணர்த்திய மற்றெரு புலவர் ‘கால்டுவெல்' ஆவர். அவர்தம் 'பரத கண்ட புராதனம்’ என்று தொகுப்பிலிருந்து (1893) உரைநடைக்கு ஒரு சான்று காணலாம்.

பாரதத்திலுள்ள சகல கதைகளையும் யூரோப் சாஸ்திரிகள் பரிசோதித்து ஒத்துப்பார்த்து ஒன்றாேடொன்று இசைவாயிருக்கிறவைகளைக் காட்டி யிருக்கிறார்கள். இதனடியில் சொல்லியிருக்கிற பாண்டவர் கதையடக்கத்திற்கு யூரோப் சாஸ்திரிகள் செய்த ஆராய்ச்சியே ஆதாரம். இந்துக்கள் எழுதியிருக்கிற நூல்களைப் பார்த்தால் பஞ்சபாண்டவர் சரித்திரம் இவ்வளவு துலக்கமாய் விளங்காது. பூர்வீகமானவைகளையும் நூதனமானவைகளையும் பிரித்தெடுத்து சுருகலானவைகளைத் தெளிவிக்கிறதற்கு இத்தேச வித்வான்களுக்கு நன்றாய்த் தெரியாது. (பக். 48)