பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/193

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
190


இவ்விடம் க்ஷேமம்;அவ்விட க்ஷேமம் வரைந்தனுப்பவேண்டும். தாங்கள் குறிப்பிட்ட திருவிளையாடற் செய்யுள் 'அன்பினில் வியப்போ வீசன் அருளினில் வியப்போவன்பர்க் கின்புருவானவீச னன்பருக் கெளிதே தைய' என்றது சரியே, எளிதேது ஐய என்பதில் ஏது வென்பது வினா “ஈசன்பர்க்கு அருளைப்பெறுதல் எளிது, அஃது அரியதன்று’, ‘அன்பு செய்தல் அரிது; அஃது எளியதன்று என்பது பொருள். இஃது உடனே தோன்றியது. இப்போதிதைத் தெரிவித்தேன்.

சதாசிவத்திற்குச் சவுக்கியமானதை எனக்குத் தெரிவிக்கவில்லை. அதுபற்றிகவலையில்லானென்று என்னை நினைத்தான்போலும். ம-௱-௱-ஸ்ரீ குமாரசாமிப் பிள்ளை, முருகப்ள்ளை, சதாசிவப்பிள்ளை இவர்களைக் குரு பூஜைக்கு அவசியம் வரவேண்டுமென்று ஒரு மனுஷ்யனைக் கொண்டு தெரிவிக்கவும்.

ம-௱-௱-ஸ்ரீ பிள்ளையவர்களிடத்தில் கந்தசாமியைத் தாங்களழைத்துக்கொண்டு சென்றதும் அவனோடு வந்த வொரு செய்யுளைத் தாங்கள் பிரசங்கித்த விபரமும் தெரிய விரும்புகிறேன்,

இவ்விடம் மகாசந்நிதானந் தங்களைப் பார்க்கும் அவா நிரம்ப வுடையது. குருபூசை முன்னிலையில் எல்லாரும் வரும்போதாவது தாங்கள் ஒரு தினம் இவ்விடம் வந்து போனற் சிறப்பாக இருக்கு மென்று நினைக்கிறேன். அப்பால் தங்களிட்டம்.

பவ, கார்த்திகை

இங்ஙனம்,

(1875)

தி. மீனாட்சி சுந்தரம்.


இவ்வாறே பிள்ளை அவர்களுக்கு அவர் நண்பராகிய சேஷையங்கார், சாமிநாத தேசிகர் ஆகியோர் எழுதிய கடிதங்களும் உடன் தரப்பெறுகின்றன.