பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/200

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பிற்சேர்க்கை

மூன்று சொற்பொழிவுகளிலும் எடுத்துக்காட்டின போக, இங்கே தனியாக அவற்றேடு பொருந்திய ஒருசில எடுத்துக்காட்டுகளை இணைத்துள்ளேன். இவை போன்று இன்னும் எத்தனை எத்தனையோ வகைகளில் தமிழ் உரை நடையில் பலநூல்கள் சென்றநூற்றாண்டில் வெளி வந்துள்ளன. அவற்றுள் மிகச்சிலவே நாம் இங்கே கண்டவை. ஒவ்வொரு துறையிலும் ஆயிரக்கணக்கான மேற்கோள் காட்டலாம். எனினும் எல்லை கருதிச் சொற்பொழிவில் வந்தனபோக ஒரு சிலவற்றை ஈண்டு இணைத்துள்ளேன். மேலும் வேண்டுபவர் அவ்வத்துறை நூல்களை ஆராய் வாய்ப்பு உண்டு.

1. தமிழறியு மடந்தை கதை; 2. விக்ரமாதித்த கதை; 3. தேரூர்ந்த சோழன் கதை, 4. மாட்டு வைத்தியம்; 5. வைத்திய அட்டவணை; 6. கயிலை வாசகம்; 7. மதுரைச் சங்கத்தார் சரித்திரம்;8. சிவகங்கை மறவர் சாதி விளக்கம்; 9. தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு; 10. பிரசித்த பத்திரிகை; 11. திராவிடப்பிரகாசிகை; 12. பெரிய புராண வசனம்; 13. மெய்ஞ்ஞான பானு: 14. பஞ்சபத மகா வாக்கியம்; 15. துறவற உத்தியானம்; 16. அத்வைத தூஷண பரிகாரம்; 17. திருவருட்பா—உபதேசப் பகுதி; 18. நித்திய ஒழுக்கம் என்னும் உலகியல்; 19. குறள் மூலமும் சுகாத்தியர் பொழிப்புரையும்;20 இஸ்தியார் நாமா.

1. தமிழறியு மடந்தை கதை-வசனம்: - ஏடுகள் 35 அச்சிடப் பெற்றுள்ளன. ஆண்டு (ஆங்கிரசு) 1812 ஆம் ஆண்டு ஆடி ௴ 32 ௳ தமிழறிவான் கதை எழுதி முகிழ்ந்தது முற்றும்:-சிவகாமி அம்மை துணை-இராம செயம்.