பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/203

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
200

வரன்........ பிரம விஷ்ணு முதலான பேருடன் வந்து காட்சி கொடுத்தார்.

7. மதுரைச் சங்கத்தார் சரித்திரம்

முடிவு:நான் வள்ளுவன், பரதேசி, மயிலாப்பூரில் தினம் இரண்டு பணத்துக்குக் கூலி பு(பிடை)டவை நெய்து சீவனம் பண்ணிக்கொண்டிருக்கிறவன். எனக்கு நான் கஷ்டப்பட்டு சம்பாதிக்கிர இரண்டு பணம் போதுமே யல்லாது இந்த இராசத் திரவிய மெல்லாம் வேண்டியதில்லை யென்று சொல்லுமிடத்தில் பாண்டியன் நிரம்பவும் வேண்டிக் கொண்டான். அப்போது அதில் கொஞ்சம் எடுத்துக்கொண்டு வெளியே வந்து, பரதேசிகள் பிராமணர்க (ணா)ளுக்குக் கொடுத்துப் போட்டு, பாண்டியனிடத்தில் சொல்லிக்கொண்டு மயிலாப்பூருக்கு வந்துவிட்டார்.

—இது சங்கத்தார் சரித்திரம்.

8. சிவகங்கை மறவர் ஜாதி விளக்கம். (ஏழுவகை)

இந்த மறவர் தாயார் கிளையிலே கலியாணம் பண்ணக் கூடாது. தகப்பன் கிளையிலே சித்தப்பன் பெரியப்பன் முதலான தாயாதக்காரருடைய பிள்ளை பெண்களைக் கலியாணம் பண்ணிக்கொள்ளுகிறது.தகப்பன் கோத்திரத்திலே கலியாணம் பண்ணக் கூடாது. இந்தச் செம்பி நாட்டு மறவரில் சேதுபதி உடையாத் தேவர் கலியாணம் பண்ணியிருக்கிற பெண் பிள்ளைகள் மட்டும் புருஷன் மிருதன் ஆனால் புருஷனோட கூட அக்கினிப் பிரவேசம்.

9. தஞ்சை மராட்டிய (மகாராஷ்டிர) மன்னர் வரலாறு.
தஞ்சை மராட்டி மன்னர் வரலாறு:— ஸ்ரீமத் போசல வமிசத்தின் ஆதிமூல புருஷர் ஶ்ரீமத் நாராயணன்............

முடிவு: காராசாவுடைய இராச்சிய பாரத்தில் ”பாஜ” என்கிற குருவி இந்தத் தேசத்துக்கும் என்றைக்கும் வராத அபறுப(அபூர்வ)மான குருவி வந்து இருந்தது.