பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/48

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
45

காலமே துவக்கி சாயங்கால பரியந்திரம் ஆற்காடு வேலூர் வந்தவாசியிலே யிருந்தும் பின்னையும் சுத்துப் பட்டிலே யிருந்தும் பிராம்மணரும், கோமுட்டிகளும், தத்துவாதிகளுமாய் வந்த பேர் ஆயிரம் சனத்துக்கு அதிகமே உண்டு. அதிய செட்டியார் ஆனந்த செட்டி மனுஷன் வெள்ளைச் செட்டியும் நம்முடைய சகலாத்து மத்ததுகளை எடுத்துக்கொண்டு வந்து சேர்ந்தார். அவர் சொன்ன சேதி என்ன வென்றால், நிசாம் பின்னை இருபதியிைரங் குதிரையுடன் பிரகாலே வருகிறதாகவும் இன்னே நாற்பதியிைரம் ஐம்பதியிைரம் குதிரையை அனுப்பி வைத்தாரென்றும் அந்தக் குதிரைகள் கணவாய்க்கிட்ட வந்திருக்கிறதென்றும் கணவாயிலே அப்துல் நபியினுடைய பிள்ளைகளுடனே சண்டை செய்து அப்துல் பிள்ளைகளை யெல்லாம் முறிஞ்சுபோய் அதன் பேரிலே அப்துல் நபிகான் சமாதானம் பேசி லக்ஷத்தைம்பதினாயிரம் ரூபாய் தீர்த்துக் கொண்டு திரமத்துகளெல்லாம் கொடுத்து பேட்டி பண்ணிக்கொண்டதாகவும், மராட்டியர் இப்புறம் வருகிறது ஊர்ச்சிதமாய்த் தானே சொன்னார்களென்று சொன்னால் நவாபு அசனல்லி-மக்கோ சாயபு இவர்களெல்லாம் இரண்டாயிரங் குதிரையுடனே போய் கணவாய் மகா பத்திரமாய் கட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் இப்படிப்பட்ட சேதிகளாய்ச் சொன்னார். இருக்கிறதனால் காரியமோ பாதியாயிருக்கிற தென்று சொன்னர்.


காலமே எட்டு மணிக்கு சின்ன துரையவர்களுக்குப் பெரிய துரையவர்கள் பெரிய துரைத்தனம் கொடுத்து 21 பீரங்கிப் போட்டு சகலமான வெள்ளைக்காரர் குமிசெலியேர் மற்றப் பேர் அனைவரும் வந்து பேட்டி பண்ணிக் கொண்டார்கள்.