பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/97

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
94


திரட்டு நூல்கள்

இவ்வாறு தனித்தனியான கதைகளின் அமைப்பு மட்டுமன்றி, பல சிறு கதைகளைத் தொகுத்து வெளியிட்ட நூல்களும் சில இருந்தன. நல்ல புலவர் எழுதிய கதைகள் சிதறுண்டுபோகா வகையில் பல அறிஞர் அவற்றைத் தொகுத்து வைத்துள்ளனர். அவற்றுள் சில அச்சிடப் பெற்றுள்ளன. அவற்றுள் ஒன்று அறிஞர் எம். எஸ். பூரணலிங்கம் பிள்ளை அவர்கள் தொகுத்தது. 1896இல் அவர் ‘வாசகத் திரட்டு’ என்ற பெயரில் பல கதை கட்டுரைகளைத் தொகுத்து வெளியிட்டார். அவற்றுள் சில பேரிலக்கியங்களிலிருந்து சுருக்கமாக எழுதப் பெற்றன; சில மொழிபெயர்ப்புகளும் உள்ளன. அவை வருமாறு:

1. மனோன்மணி கதை ஜே. பி. வாசுதேவ பந்துலு (சுந்தரம்பிள்ளையின் மனோன்மணியம்)
2. சாதுமதி சரிதை கே. குப்புசாமி முதலியார் (King Lear)
3. மனோகரவல்லி கதை எம். எஸ். பூரணலிங்கம் பிள்ளை (Teynnyson’s Princess)
4. தற்காப்பு நியமம் வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியார் (Herbert Spen-cer’s Principle of Ethics)
5. வளநாடு வித்வான் ஜெகராவ் முதலியார் (தேம்பாவணி)
6. மாணிக்கம் விற்றப் படலச் சுருக்கம் ஞானப்பிரகாச வள்ளளார் (திருவிலையாடல் புராணம்)