பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உப்பில்லாப் பண்டம் குப்பையில்,நீர்க் குடும்பத்துள் உப்புள்ள பண்டம்கான் : கண்ணிரில் வியர்வையிலே உப்பிருக்கும் என்றே உரைத்தாலும் அவ்வுப்புச் சோற்றுக்குப் பயன்படுமா ? சுவைகூட்டும் திறனுண்டா ? கத்து கடல் நான்தான் முத்துக்குப் பிறப்பிடம். அரும்புகின்ற வியர்வையை முத்தென்பர் அம்முத்தை விரும்பி அணிவார்யார் ? வெறுத்து வழித்தெறிவார். எங்கள் குடும்பத்தை ஏந்தும் தலைவன்.கான். இத்தரையில் தண்ணீரின் மொத்த வணிகன்கான். ஆ வியாய் மாறி அனைவரையும் வாழவைக்க ஒ வின்றிப் பாடுபடும் ஒப்பற்ற தொண்டன்கான். என்னிடத்தில் செத்தவர்க்கும் இலக்கியப் புகழுண்டு. கடல் 131