பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



 வான்வில்லின் வண்ணத்தை 
 ஏழிசையாய்க் கோதை 
 வடித்தெடுத்து மாடியிலே 
 வழங்குகின்ற நேரம்.

மத்தாப்புப் பூக்களைப்போல் வண்ணவண்ணக் கருத்துக்கள் அவள்பாட்டில் தெறித்துவிழுந்தன அப்பூக்களைப்போல் அவையும் சூடாக இருந்தன.

இசையாசிரியனிடம் கற்ற உருப்படிகளைக் கிளிப்பிள்ளைபோல் அவள் பாடவில்லை. அவள் இதயத்தில் கருக்கொண்டு புல்லரிப்போடு புறப்பட்டுவந்த புதிய பூபாளங்களைப் பாடினாள் வீனையை வருடும்போதும், நீண்ட அதன் நரம்பு நாக்குகளைத் தடவும்போதும் உடல் சிலிர்க்கும் ஊற்றின்பம் அவள் மயிர்க்கால்களில் அரும்பியது,

இசையில் தன்னக் கரைத்து இசையே தானாக எழுந்து வ்ந்தாள்.

கண்ணித்தவம் 9