பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருட்டுக்குள் கழுவுகின்ற புகைப்ப டம்போல் எதிரினிலே ஓருருவம் நிற்கக் கோதை விருட்டென்று பதைத்தெழுந்தாள் மேனி யெங்கும் விரிந்திருக்கும் செங்குருதிக் காயம் , கண்ணிர்ப் பரப்பாலே பங்தலிட்ட விழிகள் ஏசு பாவிகளின் சிலுவையிலே தொங்கும் காட்சி இருப்பதுபோல் இருக்கின்ற இரக்கத் தோற்றம் , இளையமயில் கண்ணுவென் றலற லாஞள். தசைப்பிண்டம் செங்குருதி ஓட்டம்; உன்மேல் சஞ்சரிக்கும் புல்லரிப்புப் பார்வை , யாவும் கசக்கிவிட்டு நிற்கின்ற ஆவி மேகம் கண்ணன்தான் ; கனிப்பேச்சல் உன்வாய் வண்டு வசப்படுத்தி மொய்க்கமுடி யாமல் , காலன் வரைந்தபுகைப் பூ'என்று, கிழிந்து போன இசைப்பெட்டிக் குரலாலே கண்ணன் சொன்னன் , இருவிழியால் முத்துக்கள் உதிர்த்தாள் கோதை. உச்சிமலை மீதிருந்து வீராசாமி உருட்டியெனக் கொன்றுவிட்டான் பங்த லிட்ட பச்சைமரக் காட்டுக்கு நடுவே , நாகர் பள்ளத்திற் கருகென்னைப் புதைத்தான் காட்டுப் பிச்சிப்பூக் கொடிபடரக் கவிந்த கொன்றைப் பெரியமரம் குடைப்பிடிக்கப், பாடும் வண்டுச் சச்சரவுச் சுனைப்பூக்கள் கண்வி ழிக்கும் சரிவினிலே துணையின்றி உறங்கு கின்றேன் பனித்துளிகள்