பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அடைகாத்த கோதை

  அகன்ற சிறிய 

இடைவேளை நேரத்தை

  எதிர்பார்த்துக் காத்திருந்த தந்தையும் பொல்லாத்
  தனயனும் மாடிக்குள் 

வந்து புகுந்தார்;

  வதங்குமவள் ஆவியினை கட்டுப் பகலிரவாய்
  நாள்தோறும் காத்துவந்த தொட்டியை நெஞ்சத்
  துடிப்பையவர் கொண்டுசென்றார். 

எட்டித் தொலைவில்

  எவரு மறியாமல் 

தொட்டியைப் போட்டுடைத்தார்;

  கண்ணன் முடித்தலையும் வட்டுக்கைக் குட்டையும்
  பார்த்தவரை அச்சுறுத்த நட்டமரம் ஆனார்;
  நடுக்கத்தால் வேலப்பர் 

அந்தக் கணமே

  அதிர்ச்சியினால் செத்துவிட்டார். 

எந்தவிதம் தப்பிப்

  பிழைப்ப தெனகடுங்கி எங்கோ மறைந்தான்
  கொலைகாரன்; கோதையோ

______________________________ 32 பனித்துளிகள் ______________________________