பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொதுவுடமைத் தத்துவத்தின் புத்தன் ; மார்க்சின் போதிமரம் : ஞானகுரு ஆட்சி வேட்டை அதிகார மந்திரச்சொல் திட்டத் துக்குள் அடங்காமல் வளர்கின்ற உடலா தாரம். நிதிதேடும் எழுத்தாளர் வீட்டில் என்றும் கிலைத்திருக்கும் மூலதனம் , அவ்வை கூடப் பதிலறிய முடியாத வயிற்றுக் கேள்வி : பாருலகின் பொதுவான ஒருமைப் பாடு, வன்பரணர் போன்றபெருங் கவிஞர், பாட்டில் வளர்ந்துவந்த கருப்பொருள்கான் ; உலகில் யாரும் என்பிறப்பை அறியாத காரணத்தால் இறைவனுக்கும் மூத்தவன் நான் உயிரி னத்தின் துன்பத்தை அளக்கின்ற கோல்கான் மக்கள் தோலுடம்பின் கட்டாயம் கான்தான் ; ஏதும் தின்பதற்குக் கிடைக்காத போது, சாத்தான் செய்வதெல்லாம் செய்வதுதான் என்றன் வேலை, பனித்துளிகள்