தேவாரத் திருப்பதிகங்கள் 485
புளின் மேல் வைக்கப் பெற்றது. ஆதலின் வைப்பு என வழங்கப் பெறுவதாயிற்று. '
யாப்பு 3.
தக்கன் வேள்வி தகர்த்தவன் பூந்தராய்
மிக்க செம்மை விமலன் வியன் கழல் சென்று சிந்தையில் வைக்க மெய்க்கதி நன்ற தாகிய நம்பன் தானே.
இப்பதிகம்,
தான தான தனதனு தானளு தான தான தனகு தனதன என இரண்டடிச் செய்யுளாய், அதன்மேல்,
தான தான்ன தான தானன தான தானன தானு தாஞ. என ஈரடி வைப்பாய் வருதலின்
ஈரடிமேல் வைப்பு என்னும் பெயர்த்தாயிற்று.
ஆடி ய்ைநறு நெய்யொடு பால் தயிர்
அந்த ணர்பிரி வாதசிற் றம்பலம் தான தானன தானன தானன
தான தானன தானன தானன. என முற்காட்டிய முதல் யாப்பின் கட்டளை யடியினை இரண்டாகத் துணித்த நிலையில் அமைவது இம் மூன்ரும் யாப்பாதல் காண்க. கொட்டமே கமழும்’ என்னும் முதற் குறிப்புடைய ஆரும் பதிகத்தின் ஈரடி மேல் வைப்பாகிய உறுப்பு,
1. போக்கியல் வகையாகிய சுரிதகம் வைப்பு’ எனவும் வழங்கப்பெறும். அது தரவோடு ஒத்த அளவினதாகியும் அதனிற் குறைந்த அளவினதாகியும் குற்றந்தீர்ந்த பாட் டின் இறுதிநிலையை உரைத்துவரும் என்பர் தொல்காப்பியர் (தொல் - செய்யுளியல் - சூ. 138, 137.)