பக்கம்:பயன்தரும் யோகாசனங்கள்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயன்தரும்யோகாசனங்கள் 49 பழவகைகளை அதிகம் உண்ணலாம். மற்ற பழங்கள் விலையுயர்ந்தவை என்றால், வாழைப்பழம் நல்ல சத்துள்ள ஆகாரமே. தினம் அதனை உண்டு வந்தாலே போதுமானது. கசப்புத் தன்மையுள்ள பாகற்காய் போன்ற காய்கறிகள் வயிற்றினுள்ளிருக்கும் பூச்சிகளை அழிக்கும் ஆற்றல் உடைய வையாகும். உணவுடன் பாகற்காய் போன்றவற்றை சேர்த்துக் கொள்ளலாம். அதிகமான பச்சைக் காய்கறிகள், கீரைவகைகள் எல்லாம் நல்ல சக்திவினைக் கொடுப்பதாகும். மோர் உடம்புக்கு மிகவும் நல்ல பானமாகும். எந்த உணவாக இருந்தாலும், விரும்பி உண்ணுகின்ற பழக்கத்தைப் பெறவேண்டும். அளவுக்கு அதிகமாக உண்ணுதல் வயிற்றுக்குக் கேடு. வயிறு கெட்டால் உடலே கெட்டுவிடும். தூங்கி விழிக்கும் போதே காலையில் ஒருவன் பசியுடன் எழுந்தானேயானால் அவனுடல் நல்ல நிலையில் சுகமான நிலையில் இருக்கிறது என்பதே அர்த்தமாகும். படுத்த உடனே எவன் உறங்குகிறானோ, அவன் மன நிலையில் குழப்பமில்லாமல் தெளிவாக இருக்கிறான் என்றும் நாம் அறியலாம். எல்லா நிலைகளுக்கும் உணவு முறையே ஆதாரமாகும். வீட்டில் இருப்பதை, கிடைப்பதைவிரும்பி உண்ணுங் கள் வசதியிருந்தால், பழங்கள், பால், முட்டை, போன்ற வற்றை சேர்த்துக் கொள்ளலாம். இருப்பதைக் கொண்டு திருப்தியடைந்து, உண்பதைக் கொண்டு உவப்பதால், நிச்சயம் உடல் தானாகவே தேறிக் கொள்ளும். அளவான ஆசனப் பயிற்சியும் அத்துடன் சேர்ந்துவிட்டால், உடலில் நல்ல அமைப்பும் வலிவுலலடன் கிடைக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமே இல்லை.