பக்கம்:பயன்தரும் யோகாசனங்கள்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா ot-or- _ ----- ஒரு வளைவுபோல், அல்லது ஒரு பாலம் அமைவதுபோல, இடுப்பினை நன்றாக மேலே உயர்த்தி, அதே சமயத்தில் கழுத்து பாகத்தைத் தூக்கி உயர்த்தி, தலையின் உச்சிபாகம் பிறகு, கைகளால் இரு கால் கட்டை விரல்களைப் பற்றிக்கொண்டு முன் கூறிய முறையில் இருக்கையில் இருக்க வேண்டும். குறிப்பு: சர்வாங்காசனாவுக்குப் பிறகு, மத்சியா சனத்தைச் செய்யவேண்டும். சர்வாங்காசனத்தில் முது கெலும்பும் கழுத்தும் முன் பக்கமாக வளைகின்றன. அதில் வலியும் வேதனையும் இருந்தால், மத்சியாசனத்தில் முதுகெலும்பும் கழுத்தும் பின்புறமாக வளைவதால் தசைகளில் ஏற்படுகின்ற பிடிப்பும், விறைப்பும், முறுக்கும் மற்ற வலிகளையும் இது தீர்த்து வைக்கிறது. சர்வாங்காசனம் செய்கின்ற 3ல் 1 பங்கு நேரத்தில் தான் மத்சியாசனம் செய்ய வேண்டும் என்று ஒரு சிலர்: அபிப்ராயப்படுகின்றார்கள். முதலில் மத்சியாசனம் செய்ய சிரமமாகத்தான் இருக்கும். பழகப்பழக நன்றாக உடல் வளைந்து கொடுக்கும். எண்ணிக்கை 1. முதலில் விளக்கியவாறு, பத்மாசன இருக்கையிலிருந்து பின்புறமாகப் படுக்கவும். s 2. பத்மாசன இருக்கைக்கு வரவும்.