எழுத்துக் குடும்பம் 79.
வந்து ஒன்றுவதைப் புணர்வது என்று இலக்கணப் புலவர்கள் சொல்கிருர்கள். பெண்ணும் ஆணும் ஒன்றுபடுவதையும் அதே வார்த்தையால் உலகத் தில் வழங்குகிருேம்.
ம்ே என்ற கற்புடைய பெண், 'சா என்ற கணவனேக் கண்டவுடன் என்ன செய்கிருள் பார்ப்போம்; அந்தப் புருஷனுக்கு ஏற்ற பெண் யார் என்று பார்க்கிருள்; அந்தப் பெண் அருகிலேதான் நிற்கிருள் புணர்ச்சி யில், ம்’ என்ற பெண் அங்கே இருப்பதில்லை; 'சா என்ற கணவனுக்கு உரிய ஜோடியாகிய, ‘ஞ்’ என்ற பெண் வந்துவிடுகிருள். எனவே. மரம்-சாய்ந்தது என்ற இரண்டையும் சேர்க்கும்போது, ம்ே போய், ஞ் ஆகி மரஞ் சாய்ந்தது என்று முடிகிறது. கல்யாணம் கற்பு முறைப்படி நடந்துவிடுகிறது. -
- 3
உலகத்தில் உள்ள கல்யாணம் எப்படியோ, அப்படியே எழுத்துலகிலும் கல்யாணம் நடைபெறு கிறது. அந்தக் கல்யாணத்தின் ஒழுங்கு முறைகளைத் தொல்காப்பியம் எழுத்ததிகாரத்தில் புணரியல் முதலிய அத்தியாயங்கள் மூலமாகத் தெரிவிக்கிறது.